புதன், 22 செப்டம்பர், 2021

நல்லது செய்ய வாருங்கள்(23.9.2021)

நல்லது செய்ய வாருங்கள்

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய முதல் வாசகம் சரி, நற்செய்தி வாசகம் சரி நன்மை செய்ய நமக்கு அழைப்பு தருகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் நடந்தவைகளை நினைத்துப் பார்த்து அதாவது இறைவன் செய்த அனைத்து விதமான நன்மைகளையும் நினைத்து பார்த்து அந்த ஆண்டவருக்கு அழகிய ஒரு ஆலயம் கட்டி எழுப்புவதற்கு அனைவருக்கும் அழைப்பு தரப்படுகிறது. தரப்படுகின்ற அழைப்பை உணர்ந்து கொண்ட மக்கள் தங்களிடமிருந்தவற்றை எல்லாம் கொடுத்து ஆண்டவருக்கு அழகிய ஆலயத்தை கட்டும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்பதை வாசிக்க கேட்போம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினுடைய பணியை இந்த மண்ணிலே அவருக்கு முன்பாக வந்து, அவருக்கான பாதையை ஏற்படுத்தும் வண்ணமாக ஆண்டவர் இயேசுவின் கை வன்மையை பெற்றிருந்த திருமுழுக்கு யோவான் இறையாட்சியின் விழுமியங்களை உள்ளத்தில் என்றவராய் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அஞ்சாது அவர்கள் வாழ்வில் நிகழ்கின்ற தவறுகளை சுட்டிக் காண்பித்து சரியான பாதையில் பயணம் செய்ய அழைப்பு தருகின்றார். அதன் விளைவாக தனது இன்னுயிரையும் அவர் இழந்தார். இவரை கொலை செய்ய செய்த ஏரோது இந்த திருமுழுக்கு யோவானை போலவே இந்த சமூகத்தில் இறையாட்சியின் மதிப்பீடுகளை செய்து கொண்டிருந்த இயேசுவைக் கண்டு தான் கொலை செய்த யோவான் தான் உயிரோடு எழுப்பப்பட்டார்  என அச்சம் உற்றான்.

நல்லதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்ற போது தவறிழைத்த உள்ளங்கள் ஒவ்வொன்றுமே தங்களின் செயல் குறித்து அஞ்சுவார்கள் என்பதற்கு சிறந்த உதாரணமாக இன்றைய நாள் வாசகங்கள் அமைகின்றன. 

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்பி அவரது பணியை செய்வதற்காக அனுதினமும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கக்கடிய நாம் ஒவ்வொருவரும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை மட்டுமே மனதில் நிறுத்தி, நல்ல பணிகளை ஒவ்வொரு நாளும் முன்னெடுக்க வேண்டும். கடந்து வந்த பாதைகளை நினைத்து பார்த்து அழகிய ஆலயம் எழுப்புவதற்கு ஒன்றிணைந்த மக்களை போல நாம் நல்ல பணிகளை செய்வதற்கு ஒன்றிணைய வேண்டும் என்ற செய்தி  இறைவன் இன்றைய நாளில் நமக்குத் தருகின்றார்.

நல்ல பணிகளை செய்கின்ற போது வாழ்வில் துன்பங்களையும், துயரங்களையும் சந்திக்கின்ற சூழல் ஏற்படுமாயின், சூழ்நிலைகளைக் கண்டு அஞ்சாது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்பி தொடர்ந்து நல்ல செயல்களை செய்வதில் நாம் கருத்தாக இருக்க வேண்டும். அவ்வாறு செயல்படுகின்ற போது சமூகத்தில் தவறாக எண்ணுவோர் உள்ளத்தில் குழப்பமும், கலக்கமும் ஏரோதின் உள்ளத்தில் எழுந்தது போல எழலாம். ஆனால் நாம்  ஆண்டவரை நம்பி அனுதினமும் நல்ல பணிகளைச் செய்ய இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...