செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

இணைந்து ஜெபிப்பதை இறைவன் விரும்புகிறார். ..(11.8.2021)

இணைந்து ஜெபிப்பதை இறைவன் விரும்புகிறார். 


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
     அனுதினமும் ஆண்டவரை நினைக்கக் கூடிய நம்மில் பலர்,  ஒவ்வொருவரும் ஆண்டவரிடத்தில் நமது தேவைகளைக் எடுத்துரைக்கின்றோம். ஆனால் நாம் இணைந்து ஜெபிப்பதை இறைவன் விரும்புகிறார். ஏனென்றால் நாம் அனைவரும் அவரை தந்தை என அழைக்கின்றோம். தந்தை என அவரை அமைப்பதால் நாம் அனைவரும் அவரது பிள்ளைகளாகிறோம். பிள்ளைகளாகிய நம்முடைய வேண்டுதலானது, மனம் ஒத்து இருக்கும் பொழுது அது இறைவனால் கேட்கப்படுகின்றது.  இறைவனால் அது நிறைவேற்றப்படுகிறது. 

         எங்கேனும் ஒரு தீர்வை எடுக்க வேண்டும் என்றால், பத்து பேர் இருக்கக்கூடிய இடத்தில் எத்தனை பேர் இந்த கருத்தை ஆதரிக்கிறீர்கள்? என்ற கேள்வியை எழுப்பி அதிகமானவர்கள் எதை ஆதரிக்கிறார்களோ அதனை நாம் தீர்வாக எடுப்பது உண்டு.  அதுபோலவே இறைவனிடத்தில் மன்றாடும் போதும் நாம் மனமொத்து ஒரு கருத்துக்காக அனைவரும் இணைந்து செபிக்கின்ற போது,  இறைவன் அதற்கு செவிகொடுக்கக் கூடியவராக இருக்கிறார் என்ற சிந்தனையை இன்றைய நற்செய்தி வாசகம் வழங்குகிறது.  மேலும் இன்றைய நற்செய்தி வாசகம்,  நம்மை குறை காணக்கூடிய மனிதர்களாக அல்ல,  நிறைகளை மையப்படுத்தக் கூடிய மனிதர்களாக இருக்க அழைக்கின்றது.  நாம் அடுத்தவரிடத்தில் குறைகளை அதிகம் கண்டு கொண்டிருக்கிறோம்.  குறைகளை கண்டு கொள்வதை விட்டுவிட்டு,  அடுத்தவரிடம் இருக்கக்கூடிய நேர்மறையான எண்ணங்களையும் நல்ல செயல்பாடுகளையும் அதிகமாக கண்ணோக்கவும்,  அதனை முன் நிறுத்தவும் இன்றைய நாளில் இறைவன் அழைக்கின்றார்.
       பிறரை குற்றவாளிகள் என சொல்லிக் கொண்டிருக்கும்போது தான் நாம் குற்றவாளிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.... என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.  நாம் வாழுகின்ற இந்த உலகத்தில்,  பிறரிடம் இருக்கின்ற குறைகளை பெரிதுபடுத்துவதை விட்டுவிட்டு, அவர்களிடம் இருக்கின்ற நிறைகளை பெரிதுபடுத்தி,  இந்த உலகத்தில் ஒத்த கருத்துடையவர்களாய், இறைவன் விரும்பக்கூடிய இறையாட்சியின் மதிப்பீடுகளை மட்டும் மனதில் நிறுத்தியவர்களாய்,  அந்த மதிப்பீடுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கக் கூடிய இயேசுவின் உண்மைப் பணியாளர்களாய் மோசேயைப் போல நாமும் இந்த உலகத்தில் பயணம் செய்து இறைவனது உண்மைச் சீடர்கள் என்பதை சொல்லால் அல்ல,  செயலால் வெளிக்காட்டிட இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...