செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

போலியா? அசலா?... (25.08.2021)

போலியா? அசலா?... 

பொதுக்காலம் 21ஆம் வாரம் ஆகஸ்ட் 25 புதன்;கிழமை

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!



ஒருமுறை சார்லி சாப்ளினை போல வேடம் அணிந்து வருபவர்களுக்கு பரிசு வழங்குவதாக போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் சார்லி சாப்ளின் கலந்து கொண்டார்.  அதில் அவருக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது.

ஆம்! அசலை விட போலிக்குத் தான் ஈர்ப்பு அதிகம். இன்றைய உலகம் இவ்வாறு தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் அக்காலத்தில் இருந்த மறைநூல் அறிஞர், பரிசேயர், சதுசேயர்களின் வெளிவேடத்தன்மையை இயேசு சுட்டிக் காட்டினார்.  அந்நிலையிலிருந்து அவர்கள் மாற்ற வேண்டும் என்பதை மிகவும் ஆணித்தரமாக அச்சமின்றி அனைவருக்கும் முன்பாகவும் எடுத்துரைக்கக் கூடியவராக இயேசு இருந்தார். இந்த இயேசுப் பின்பற்றிய சீடர்களும் தங்களுடைய வாழ்வில் இயேசுவைப் பிரதிபலிக்கக் கூடியவர்களாக மாறினார்கள்.  மக்கள் தவறான பாதைக்கு செல்லும் பொழுது அவர்கள் செல்லுகின்ற பாதை  தவறு என்பதை சுட்டிக் காட்டக்கூடிய ஒரு இறைவாக்கினருக்குரிய பணியினை சிறப்பாக செய்தார்கள்.  இதைத் தான் இன்றைய நாள்  முதல் வாசகத்தில் பவுல் தெசலோனிக்க நகர மக்களுக்கு  எழுதுகிறார். 

நாங்கள் உழைத்தது,  நாங்கள் நற்செய்தி அறிவித்தது அனைத்துமே உங்களுக்காகத் தான்.  இதன் உண்மையான நோக்கம் கடவுளுடைய வார்த்தை உங்களுக்குள் இருந்து செயலாற்ற வேண்டும் என்பதே என்று கூறுகிறார பவுல்;.  கடவுளின் வார்த்தை நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. வார்த்தை உள்ளுக்குள் இருப்பதால் எந்தவித பயனும் அல்ல.  நாம் கேட்ட  இறைவனது வார்த்தைகள் நமது வாழ்வில் செயலாக்கப்பட வேண்டும்.  பரிசேயரும், மறைநூல் அறிஞர்களும், சதுசேயர்களும் இறைவார்த்தையை கூறினார்கள். ஆனால் அது அவர்கள் வாழ்வில் செயலாக்கப்படவில்லை.  எனவே தான் இயேசு அவர்களை சாடக் கூடியவராக இருந்தார். 

இந்த அழகிய உலகத்தில்; அனுதினமும் இறைவனது வார்த்தைகளை வாசிக்கின்றோம்.  இறைவனது வார்த்தைகள் ஒலிக்கப்படுவதை காதுகளால் கேட்கின்றோம்.  கேட்பதை கேட்டு விட்டு நகர்ந்து விடுகிறோம்.  ஆனால் நாம் வாசிக்கின்ற இறைவார்த்தையும், நாம் கேட்கின்ற இறைவார்த்தையும்,  நம் இதயத்தில் பசுமரத்தாணியாய் பதிய வேண்டும்.  அவ்வாறு பதிய வைப்பது நமது வாழ்வில் செயலாக்கப்படுத்தப்பட வேண்டும்.  அவ்வாறு செயலாற்றும் போது  நாமும் கடவுளின் வார்த்தைகளுக்கு ஏற்ப இம்மண்ணில் செயல்படக்கூடிய ஆண்டவர் இயேசுவின் உண்மை சீடர்களாக மாறிட முடியும்.  நமது உள்ளங்களில் இருக்கின்ற இறைவார்த்தை நமது வாழ்வில்  செயலாக்கம் பெற இன்றைய நாளில் இறையருளை இணைந்து வேண்டுவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...