ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

அலட்சியம் செய்யப்படுவது முடங்கி விடுவதற்காக அல்ல...(30.8.2021)

அலட்சியம் செய்யப்படுவது முடங்கி விடுவதற்காக அல்ல...

எதுவும் தொடக்கத்தில் இருப்பது போலவே இறுதிவரை இருப்பதில்லை.
இல்லாதபோது தேடல் அதிகமாக இருக்கும் ஆனால் இருக்கும்போது அலட்சியமே அதிகமாக இருக்கும் இதுவே வாழ்க்கையாக இருக்கிறது இந்த உலகத்தில்.
அன்பு நெஞ்சங்களே வாழ்வில் அலட்சியம் என்பது பல நேரங்களில் பல இடங்களில் நாம் சந்திக்கின்ற ஒன்று. ஏன் பல நேரங்களில் நாம் பலருக்கு தருகின்ற பரிசாகவும் அது அமைகிறது.

இயேசு என்றாலே பொதுவாக அன்பானவர், இரக்கம் உள்ளவர், அனைவரையும் மன்னிக்க கூடியவர்,
 மகத்துவமான மனிதர். ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் பார்க்கின்ற இயேசு சொந்த ஊரில் இருந்து விரட்டப்பட்டவர், புரகணிக்கப்பட்டவர்,  தனது சொந்த ஊரில் அலட்சியம் செய்யப்படுகிறார். வாழ்வில் புறக்கணிப்பும் ஏற்றுக்கொள்ளப்படுதலும் எப்போதும் நம்மை பின்தொடர கூடியவைகள்.

 இயேசுவை காண்பதற்கு ஒரு கூட்டம் ஓடோடி வந்தது, இயேசுவின் வார்த்தைகளை கேட்பதற்கும், வார்த்தைகளின் படி தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்வதற்கும் பலர் இயேசுவை பின் தொடர்ந்தார்கள். ஆனால் இயேசு தனது சொந்த ஊரில் உள்ள மக்களால் இன்று புறக்கணிக்கப் படுகிறார். 

பொதுவாகவே வாழ்வில் நாம் அறியாதவர்களைவிட அறிந்தவர்களால் தான் பல நேரங்களில் அலச்சியம் செய்யப் படுகிறோம்.

ஆனால் அலட்சியம் செய்யப்படக்கூடிய நேரங்களை மனதில் கொண்டு வாழ்க்கை என்னும் பயணத்தில் நாம் சோர்ந்து விடக் கூடாது என்பதனை இறைவன் இன்றைய நாளில் நமக்கு உணர்த்துகின்றார்.

 இயேசு தனது சொந்த ஊரில் அலட்சியம் செய்யப்பட்ட நிலையிலும் அவர் தன் இயல்பை மாற்றிக் கொள்ளாதவராய் எப்போதும் எங்கெல்லாம் நம்பிக்கையாளர்கள் நிறைந்து இருக்கிறார்களோ அங்கெல்லாம் நலமான பல நல்ல பணிகளை செய்யக் கூடியவராக இருந்தார். நமது வாழ்விலும் நாமும் இயேசுவைப் போல நலமான பண பணிகளை முன்னெடுக்க கூடியவர்களாக இருக்க அழைக்கப்படுகின்றோம். பல நேரங்களில் நாம் செய்கின்ற நல்ல பண்புகளை, நல்ல செயல்களை அலட்சியம் செய்யக் கூடிய மனிதர்களை நாம் வாழ்வில் சந்திக்கலாம். ஆனால் அவர்களையெல்லாம் எண்ணி நாம் செய்யக்கூடிய நற்செயலை நிறுத்தி விடாது தொடர்ந்து இந்த சமூகத்தில் நல்ல செயலை செய்யக் கூடிய இயேசுவின் பணியாளர்களாய் பயணிக்க இன்றைய நாளில் இயேசுவின் வாழ்வு நமக்கு அழைப்பு தருகின்றது. 

மண்ணில் தோன்றிய ஒவ்வொரு மனிதனும் மரணத்தை சந்திக்க வேண்டும் என்பது காலத்தின் நியதியாக இருக்கின்ற சூழலில் நாம் மரணத்தை நெருங்கும் நேரம் வரை நல்ல செயல்களை செய்யக் கூடியவர்களாக யாரையும் அலட்சியம் செய்யாதவர்களாக ஒவ்வொருவரையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக, நன்மைகள் செய்யும் நல்ல பணியாளர்களாக இந்த சமூகத்தில் நாம் பயணம் செய்ய வேண்டும். அவ்வாறு நாம் பயணிக்கின்ற போது நாம் இந்த மண்ணுலக வாழ்க்கையை நிறைவு செய்து விண்ணக பிறப்பை அடைந்தாலும், நமது புகழ் இம்மண்ணில் ஓங்கிக் கொண்டு இருக்கும் அதற்கு நல்லதொரு உதாரணம் தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.
இயேசுவின் பாதையிலே நமது பாதச்சுவடுகளை பதியவைக்க வந்திருக்கக்கூடிய நாம் ஒவ்வொருவரும் இந்த சமூகத்தில் இந்த இயேசுவாக மாறிட இந்த இயேசுவை பிரதிபலித்திட இறையருள் வேண்டி இணைந்து ஜெபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...