செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

நன்மையை எதிர்நோக்கிட....(1.9.2021)

நன்மையை எதிர்நோக்கிட....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த அம்மாவுக்கு அல்லது அப்பாவுக்கு அல்லது அண்ணனுக்கு அல்லது அக்காவிற்கு என்று கடிதம் எழுதிய நாட்கள் எல்லாம் கடந்து போய்விட்டன இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்ற போது மலரும் நினைவுகள் போல எழுதிய கடிதங்கள் தான் நினைவுக்கு வந்தன.

 ஆம் இன்றைய முதல் வாசகத்தில் கொலோசையர் நகர மக்களுக்கு திருத்தூதர் பவுலும் திமோத்தேயுவும் வாழ்த்துக் கூறி கடிதம் எழுதுகிறார்கள்.


 அறிவியல் கண்டுபிடிப்புகளின் மேதை தாமஸ் ஆல்வா எடிசன் தன்னுடைய நிறுவனத்திற்கு ஆள் எடுக்க நேர்காணல் நடத்துவார். நல்ல அறிவார்ந்த ஒளிவீசும் இளைஞனாக ஒருவர் நேர்காணலில் பங்கெடுக்கிறார் என அறிந்தால் அவனை இரவு உணவிற்கு அழைத்துச் செல்வார். உணவு வந்ததும் ஒரு வாய் ருசி பார்த்துவிட்டு இன்னும் கொஞ்சம் உப்பு தேவைப்படுகிறது என்று சொல்வார். பிறகு அந்த இளைஞனை கவனிப்பார். அந்த இளைஞன் உடனடியாக கொஞ்சம் உப்பை தன்னுடைய தட்டில் போட்டுக் கொண்டால் அவனை தன்னுடைய நிறுவனத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டார். மாறாக அந்த இளைஞன் தான் ருசி பார்த்துவிட்டு உப்பு தேவையா என்று தெரிந்த பிறகு உப்பு சேர்த்துக் கொண்டால் அவனை அந்த நிறுவனத்திற்கு தேர்ந்தெடுப்பார்.

தாமஸ் ஆல்வா எடிசன் நிறுவனத்திற்கு ஆள் எடுக்கும் பொழுது எப்படி தாமாக சிந்தித்து செயல்படக்கூடிய நபரை தேர்ந்தெடுத்தாரோ அதுபோலவே இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் கொலோசையர்  நகர மக்களுக்கு திருத்தூதர் பவுலும் திமோத்தேயுவும் அறிவித்திருந்தாலும் இன்றையச் சூழலில் அவர்களிடம் காணப்படக்கூடிய இயேசுவின் மதிப்பீடுகலான நம்பிக்கையையும், அன்பையும் அறிந்துகொண்டு அவர்களை வாழ்த்தும் பாராட்டும் தங்கள் கடிதத்தை தொடங்குகிறார்கள்.  அவர்களிடத்தில் காணப்படுகின்ற நம்பிக்கையும் அன்பும் அவர்கள் நன்மையை எதிர் நோக்குவதால் கிடைத்தது நம்பிக்கையும் அன்பும் மேலும் வாங்கியதால் அவர்கள் திருத்தொண்டர்கள் என அழைக்கப்படுவார்கள் என்று திருத்தூதர் பவுலும் திமோத்தேயுவும்  தங்கள் கடிதம் வழியாக உறுதிப்படுத்துகிறார்கள்.

நாமும் கொலோசையர் நகர மக்களைப் போல நன்மையை எதிர் நோக்க கூடியவர்களாக இது நல்ல திருத்தொண்டர்களாக மாறிட இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.
இன்றைய நாளில் நாம் வாசிக்க கேட்கின்ற நற்செய்தி வாசகத்தில் கூட இயேசுவின் சீடர்கள் கடும் காய்ச்சலால் துன்புற்ற பேதுருவின் மாமியார் உடல்நிலைக்காக ஆண்டவரிடத்தில் மன்றாடுகிறார்கள். அதுபோலவே ஆண்டவர் இயேசு கிறிஸ்து இருக்கிறார் என்ற செய்தியை கேள்விப்பட்டு பலரும் பல நோயாளிகள், பேய் பிடித்தவர்களை ஆண்டவர் இயேசுவிடம் கொண்டு வந்து நலம் பெற்றுக் கொண்டு சென்றார்கள் என  இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம். இயேசு தனிமையாக சென்று ஜெபிக்க சென்றபோது கூட அவரைத் தேடிச் சென்ற திரளான மக்கள் அவரிடமிருந்து பலவதமான நன்மைகளை தாங்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல்
 அடுத்த வரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் பல நோயாளிகளை அவரிடத்தில் அழைத்துச் சென்றார்கள் என இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம்.

தமது நலனை மட்டும் மையப்படுத்தி வாழும் இந்த உலகத்தில் அடுத்தவர் நலனை மையப்படுத்தி வாழக்கூடிய மக்களாக நாம் வாழும் போதுதான் நன்மையை எதிர் நோக்கிய மக்களாக இச்சமூகத்தில் நாம் இருக்க முடியும் கொலோசையர் நகர மக்கள் அவ்வாறுதான் இருந்தார்கள். எனவே தான் அவர்களிடத்தில் ஆண்டவர் இயேசுவின் மீதான ஆழமான நம்பிக்கையும், அடுத்தவர் மீதான அன்பும் தொடர்ந்து இருந்தது. அதை கண்டதும் அவர்களை பாராட்டியதுபோல நாமும் நமது வாழ்வில் நன்மையை எதிர் நோக்கி இருக்கக் கூடியவர்களாக இருக்கும்பொழுது நமது வாழ்வும் கொலோசையர் நகர மக்களைப் போல நம்பிக்கைக்குரிய அன்புக்குரியவரிய வாழ்வாக அமையும் அப்போது நானும் நல்ல திருத்தொண்டர்களக மாறலாம். அத்தகைய வாழ்வை நாம் நமது வாழ்வாக மாற்றிக்கொண்டு ஆண்டவர் இயேசு காட்டுகினற பாதையில் அவரை பின்தொடர கூடிய உண்மை சீடர்களாக பயணித்திட இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...