வியாழன், 26 ஆகஸ்ட், 2021

அறநெறியோடு வாழ... (27.08.2021)

 அறநெறியோடு  வாழ...

பொதுக்காலம் 21ஆம் வாரம் ஆகஸ்ட் 27 வெள்ளி; கிழமை

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!



இன்று நாம் தாய்த்திரு அவையாக இணைந்து புனித மோனிக்கா அவர்களை நினைவு கூருகின்றோம்.  யார் இந்த மோனிகா? என்றால் இவர் புனித அகுஸ்தினாரின் அன்னை.  புனித அகுஸ்தினாரின் அன்னைக்கு திருஅவை ஏன் இவ்வளவு முக்கியத்துவத்தை தருகிறது என்றால்,  ஒரு பிள்ளையின் வளர்ப்பில் அதிக பங்கு வகிக்கக் கூடிய ஒரு பெண் அந்த குழந்தையின் தாயாக மட்டுமே இருக்க முடியும். அகுஸ்தினார்  தனது வாழ்வில் பலவிதமான தவறுகளோடு அறநெறிக்கு முரண்பட்டு வாழ்ந்த நிலையில், அவர் அறநெறியோடு இந்த சமூகத்தில் நல்லதொரு குடிமகனாக வாழ வேண்டுமென அனுதினமும் இறைவனிடத்தில் மன்றாடியவர் தான் இன்று நினைவு புனித மோனிகா அவர்கள். 

இன்றைய முதல் வாசகத்தில் தெசலோனிக்க நகர மக்களுக்கு பவுல் வேண்டுகோள் விடுக்கிறார். அவர்களிடத்தில் இருக்கக் கூடிய பரத்தமையானது விலக்கப்பட வேண்டும், மேலும்  ஒவ்வொருவரும் மதிக்கப் பட வேண்டும், மனைவியை தூயவராக கருதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்.  இந்த சமூகத்தில் அறநெறியோடு எப்படி வாழவேண்டும் என்பதை அந்த மக்களுக்கு கற்பிக்கின்ற பணியினை அன்று பவுல் தெசலோனிக்க நகரில் செய்தார்.  அதே பணியைத் தான் புனித மோனிகாவும் தன்னுடைய மகனின் வாழ்வில் செய்தார். 

நாமும்  இச்சமூகத்தில் அறநெறியோடு வாழ அழைக்கப்படுகின்றோம். இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் கூட மானிட மகனின் வருகையை எதிர் நோக்கிய பலருள்  முன்மதி கொண்டோர் மானிட மகனைக் கண்டு கொண்டது போல நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நாம் முன்மதியோடு செயல்படவேண்டும். ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  ஒருவர் மற்றவரை  விட உயர்ந்தவர் என்று எண்ணுவதை விட்டு விட்டு,  நாம் அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகள் என்பதை உணர்ந்து கொண்டவர்களாய் ஒருவர் ஒருவரை ஏற்றுக்கொண்டு, ஒருவருக்கு ஒருவர் துன்பம் விளைவிக்காது, இந்த சமூகத்தில் அறநெறியோடு  இணைந்து  வாழ இறையருளை வேண்டுவோம்.

இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...