திங்கள், 23 ஆகஸ்ட், 2021

பார்வை மாற்றம் ... (24.08.2021)

பார்வை மாற்றம் ... 

பொதுக்காலம் 21ஆம் வாரம் ஆகஸ்ட் 24 செவ்வாய்க்கிழமை

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!



இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.  இன்றைய வாசகங்கள் பார்வை மாற்றம் பெறுவதற்கு நமக்கு அழைப்பு தருகின்றன. 

இன்றைய முதல் வாசகம் திருவெளிப்பாட்டு நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. யோவான் காட்சி மூலமாக கண்டவற்றை தொகுத்து எழுதியதே திருவெளிப்பாட்டு நூல் ஆகும். இந்நூல் நிகழ்காலத்iதில் நாம் சிறப்பாக வாழ வழிகாட்டக்கூடியதாகும். எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தோடு இன்று பலர் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.  ஆதில் முக்கிய பங்காற்றுவது நம்மிடையே இருக்கக்கூடிய முன் சார்பு எண்ணங்கள். 

இன்றைய நாள் நற்செய்தி வாசகத்திலும் கூட நாசரேத்து மக்களை குறித்த ஒரு முன் சார்பு எண்ணம் கொண்டவராக நத்தானியேல் இருக்கிறார். நத்தானியேலின் உள்ளத்தை அறிந்தவரான இயேசு கிறிஸ்து, அவர் வாழ்வில் நடந்த நிகழ்வை அவருக்கு கூறுகிறார்.  ஆண்டவர் கூறிய வார்த்தைகளை கேட்டு அதிர்ந்து போகிறார் நத்தானியேல். தன் பார்வையை மாற்றுகிறார். இறைவன் படைத்த இந்த உலகத்தில் நாம் மன நிறைவோடும் மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என்றே இறைவன் விரும்புகிறார்.  ஆனால் பல நேரங்களில் நமது வாழ்வில் துன்பம் துயரமும் சூழ்ந்திருக்கிறது. இந்த துன்ப துயரங்கள் நமக்கு முன் சார்பு எண்ணங்களை உருவாக்குகின்றன.  அந்த எண்ணங்களின் அடிப்படையில் செயல்படுகின்ற போது துன்பத்தைக் கண்டு துவண்டு போகக் கூடியவர்களாகத் தான் நாம் இருக்கிறோம்.  ஆனால் துன்ப நேரங்களில் இறைவன் நம்மை வழிநடத்துகிறார். நம்மால் தாங்க முடியாத எந்த துயரத்தையும் அவர் நமது வாழ்வில் அனுமதிப்பதில்லை, என்பதை உணர்ந்து கொண்டு நாம் தொடர்ந்து இறைவன் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் துன்பத்தை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு நம்மிடம் பார்வை மாற்றம் நிகழ வேண்டும். 

நாம் முன் சார்பு எண்ணங்களின் அடிப்படையில் அடுத்தவரோடு உரையாடுவதும்,  பழகுவதும் என்று வழாமல். நமது பார்வையில் மாற்றம் பெற்றவர்களாய், வாழ்வில்  நல்லதொரு மாற்றத்தோடு இயேசுவின் உண்மை சீடர்களாய்,  முன் சார்பு எண்ணங்களை களைந்து,  ஆண்டவர் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாய் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் இறைவனது விருப்பத்திற்கு ஏற்றவர்களாய் பயணிக்க இறையருளை இணைந்து வேண்டுவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...