வெள்ளி, 14 ஜனவரி, 2022

நன்மைகள் செய்து கொண்டே...(15.01.2022)

 நன்மைகள் செய்து கொண்டே...




இயேசுவில் அன்புக்குரியவர்களே!

    நல்லது செய்ய எண்ணும் போது நம்மிடம் குறை காண்பவர்கள் அதிகமாக தென்படுவார்கள். குறை கூறுபவர்கள் குறை கூறுகிறார்கள் என்பதை மனதில் இருத்தி, நாம் நல்லது செய்தலை நிறுத்திவிடலாகாது என்ற பாடத்தை இறைவன் இன்றைய நாளில் நமக்கு கற்பிக்கிறார்.


    இயேசு அன்று சமூகத்தில் பாவிகளாக கருதப்பட்டவர்கள் அருகில் அமர்ந்து உணவு உண்டதை தவறு என சுட்டிக்காட்டியவர்கள் மத்தியில், அவர் அதை பொருட்படுத்தாது அவர்களும் கடவுளின் பிள்ளைகள், கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் என்பதை உணர்த்தும் வகையில், அவர்களோடு விருந்தினில் பங்கேற்பதை நாம் இன்றைய நாளில் வாசிக்க கேட்டோம்.


    நாமும் பல நேரங்களில் நல்லது செய்யும் போது, பலர் நம் மீது குறை கூறக் கூடியவர்களாக இருந்தாலும், அவர்கள் கூறும் குறையை மனதில் கொண்டு நாம் செய்யும் நன்மையை நிறுத்தி விடாது தொடர்ந்து நன்மைகள் செய்து கொண்டே பயணிக்க இறையருளை இறைஞ்சி வேண்டுவோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நம்பிக்கையோடும் தொடர் ஜெபத்தோடும் இந்த நாள் அமையட்டும் ...(9.10.2025)

  “கேளுங்கள் – உங்களுக்குக் கொடுக்கப்படும்” அன்பான சகோதர சகோதரிகளே, இன்றைய இறைவார்த்தையில் இரண்டு  செய்திகளை இறைவன் நமக்குத் த...