வெள்ளி, 28 ஜனவரி, 2022

இக்கரைக்கு அக்கரை பச்சை...(29.01.2022)

இக்கரைக்கு அக்கரை பச்சை...



    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    இக்கரைக்கு அக்கரை பச்சை என்று கூறுவது போல, பல நேரங்களில் ஊருக்கு அதிகமாக உபதேசம் செய்யக்கூடிய நபர்கள் எல்லாம், தங்கள் வாழ்வில் ஒரு இன்னல் என்று வருகின்றபோது, தடுமாறக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இத்தகைய மனிதர்களாகத் தான் இயேசுவின் சீடர்களை இன்றைய நாள் வாசகங்களில்  காணமுடிகிறது.  இயேசுவோடு இந்த சமூகத்தில் அவர்களும் பயணம் செய்தவர்கள்.

    இயேசு செய்த அரும் அடையாளங்களைக் கண்டவர்கள். இயேசு செய்த புதுமைகளை எல்லாம் கண்டு வியந்து போனவர்கள். ஆனால் தங்கள் வாழ்வில் ஒரு துயரம் வருகின்றபோது, என்ன செய்வது என தெரியாது உயிரை காத்துக் கொள்ள வேண்டுமென அஞ்சி நடுங்குகிறார்கள். அவர்களின் நடுக்கத்தையும் அச்சத்தையும் அறிந்த இயேசு அவர்களுக்கு நம்பிக்கையை தருகிறார். அங்கு இருக்கக்கூடிய இன்னலையும் அகற்றுகிறார்.  

    நாம் நமது வாழ்வில் பல நேரத்தில் நம்பிக்கையை பற்றி பேசுகிறோம். ஆனால் வாழ்வில் இக்கட்டான சூழலை சந்திக்கின்ற போதெல்லாம் நாம் நமது நம்பிக்கை எவ்வாறு உள்ளது என்பதை சிந்திக்கவும், அதனை சீர் தூக்கிப் பார்த்து ஆழமான நம்பிக்கையோடு பயணிக்கவும் இன்றைய நாளில் இறையருள் வேண்டுவோம்.



1 கருத்து:

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...