திங்கள், 17 ஜனவரி, 2022

மனித நேயச் செயல்களில் ஈடுபடுங்கள்...(18.01.2022)

மனித நேயச்  செயல்களில் ஈடுபடுங்கள்...



சட்டம் மனிதனுக்காக. சட்டத்திற்காக அல்ல மனிதன். இன்று சட்டத்தின் பெயரால் மனிதனை அடக்கியாளும் நிகழ்வுகள் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் சட்டங்கள் எல்லாம் எதற்காக உருவானது என்று சிந்திக்கின்ற போது, அறநெறியோடு நாம் இந்த சமூகத்தில் வாழ வேண்டும் என்பதற்காக மனிதன் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்டது தான் சட்டங்கள்.


    அந்த சட்டங்களை இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டு,  மனித நேயமற்ற செயல்கள் இச்சமூகத்தில் அரங்கேற நாம் காரணமாக இருத்தல் ஆகாது என்பதை இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் உணர்த்துகிறார். பசியால் வாடுபவனுக்கு, உணவு வைத்திருப்பவன் உணவு தருவது தான் மனித நேயப் பண்பு. ஆனால் அதனை செய்வதை விட்டுவிட்டு, நாம் பல நேரங்களில் சட்டங்களை மட்டுமே இறுகப் பிடித்துக் கொண்டு, அடுத்தவர் செய்கின்ற செயல்களில் குறைகளை காண்கின்றவர்களாக இருக்கின்றோம்.


    ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, குறைகள் காண்பதை தவிர்த்து மனித நேயச்  செயல்களில் ஈடுபடுங்கள் என்று இன்றைய வாசகங்கள் வழியாக உணர்த்துகிறார். இறைவன் உணர்த்துவதை உணர்ந்து கொண்டு வாழ்வில் மாற்றத்தை உருவாக்கிட இணைவோம் இன்றைய நாளில்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...