செவ்வாய், 18 ஜனவரி, 2022

எதைச் செய்வது சிறந்தது?(19.01.2022)

 எதைச் செய்வது சிறந்தது?



இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாளின் முதல் வாசகத்தில் சிறுவன் தாவீது கோலியாத்தை என்ற மிகப்பெரிய மனிதனை கடவுளின் துணை கொண்டு எதிர்கொண்டு வெற்றி பெற்றதை குறித்து நாம் வாசிக்கின்றோம்.


இன்றைய நற்செய்தி வாசகத்தில் உன்கூட ஆண்டவர் இயேசு கிறிஸ்து கை தூக்கிய நிலையில் இருந்த ஒரு மனிதனை பலருக்கு முன்பாக எழுப்பி நிறுத்தி போய் நாளில் நன்மை செய்வதால் தீமை செய்வதால் என தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் கேள்வி எழுப்புகிறார் அவர்கள் பதில் ஏதும் கூறாத நிலையில் நன்மை செய்வதற்கு நேரமும் காலமும் அவசியம் அல்ல என்பதை தனது செயலால் உணர்த்தக்கூடிய வகையில் அந்த கை சூம்பிய மனிதனுக்கு நலம் தருகிறார்.



இன்று நாம் வாசிக்கக் கேட்ட இந்த நற்செய்தி பகுதிகள் நமக்குத் தருகின்ற வாழ்க்கை பாடம் என சந்திக்கின்ற போது மனிதர்களாக மண்ணில் பிறந்துள்ள நாம் ஒவ்வொருவருமே நல்லது செய்வதற்கு நேரமும் காலமும் கூடி வரும் என காத்திருக்க வேண்டிய அவசியம் அல்ல ...ஒவ்வொரு நாளும் நாம் நலமான நல்ல பணிகளை முன்னெடுத்து கொண்டு செல்ல இந்த நாள் அழைப்பு தருகிறது .



சமூகத்தில் நாம் நலமான ஒரு பணியைச் செய்ய விரும்புகிறோம். ஆனால் அதனை செய்யும் போது பலர் நம் செய்கையை குற்றம் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு நமக்கு முட்டுக்கட்டையாக வாழ்வில் பலர் இருப்பார்கள். அவர்களுக்கு மத்தியில், அவர்களுக்கு அஞ்சி, நாம் செய்ய நினைத்த நலமான பணிகளை செய்யாமல் விட்டு விட்டுச் செல்வது முறையா? அல்லது அந்தப் பணிகளை செய்வது முறையா? என்ற கேள்வியினைத் தான் இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்குள் எழுப்பி பார்க்க அழைப்பு தருகிறார்.


    கை சூம்பிய ஒருவனை எழுப்பிய போது இயேசுவும் இதுபோன்ற சூழல்களை சந்திக்கின்றார். ஆனால் மற்றவர்களைப் பற்றி அவர் மனதில் கொள்வதை விட, எது நலமானதோ அந்தப் பணியினை அவர் முன்னெடுக்கிறார். அந்த இயேசுவைப் போலத் தான் நாமும் இந்த சமூகத்தில், நம்மைக் குறை கூறுபவர்கள், நம்மீது குற்றம் சாட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பவர்களை எல்லாம் மனதில் கொண்டு, நல்லது செய்வதை நிறுத்தி விடாது, நல்லது செய்வது தான் முதன்மை என்பதை மனதில் கொண்டு அதனை செய்யக் கூடியவர்களாக வாழ இறையருள் வேண்டுவோம்.


இறைவன் தருகின்ற இந்த அழைப்பை உணர்ந்தவர்களாக மண்ணில் வாழும் ஒவ்வொரு நாளும் நலமான பல நல்ல பணிகளை முன்னெடுத்துச் செல்ல தாவீது கொண்டிருந்த துணிவை நாமும் பெற்றுக்கொண்டு வாழ இறையருள் வேண்டுவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...