சனி, 29 ஜனவரி, 2022

எல்லாச் சூழலிலும் நல்லதை செய்ய...(30.01.2022)

 எல்லாச் சூழலிலும் நல்லதை செய்ய...




இயேசுவில் அன்புக்குரியவர்களே!

    கடவுள் நாம் பிறப்பதற்கு முன்பாகவே நம்மை அறிந்தவர். நம்மை இவ்வுலகத்தில் அவர் பிறக்க வைத்ததற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கத்தை கண்டுகொண்டு இச்சமூகத்தில் பயணம் செய்ய நாம் அழைக்கப்படுகின்றோம். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருமே இந்த உலகத்தில் அன்பை விதைக்கவே அழைக்கப்படுகிறோம். நாம் கண்ணில் காணுகின்ற  ஒவ்வொருவரையும் அன்பு செய்ய கடமைப்பட்டிருக்கிறோம். பல நேரங்களில் நாம் பலரால் புறக்கணிக்கப்படலாம். 


    இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவை அவரது சொந்த ஊரில் உள்ளவர்கள் புறக்கணிக்கிறார்கள்.  ஆனால் இயேசு நலமானதை செய்தார்.  நாமும் அவரைப் போலவே  நலமானதை செய்ய வேண்டும்.  அன்போடு அனைவரிடத்திலும் பழக வேண்டும். நம்மை புறக்கணிப்பவர்களையும் அன்பு செய்ய வேண்டும்.  அதற்காகத்தான் இறைவன் நம்மை அழைத்தார். அன்று எரேமியாவை  அழைத்தது போல, நம்மை அழைத்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டு, வாழ்வில் எப்போதும், எல்லாச் சூழலிலும் நல்லதை செய்ய இறையருள் வேண்டுவோம்.






1 கருத்து:

ஒருவரால் அழிவு - ஒருவரால் வாழ்வு (21.10.2025)

அன்புள்ள  சகோதரர் சகோதரிகளே, இன்றைய வாசகங்களில் திருத்தூதர் பவுலும், நம் ஆண்டவராகிய இயேசுவும்,  ஒரே மையக்கருத்தை நமக்குக் கூறுக...