வெள்ளி, 31 டிசம்பர், 2021
மலர்ந்தது ஆசீர்வாதத்தின் ஆண்டு...(01.01.2021)
நமது தாய்மார்களை நன்றியோடு நினைவு கூர்வோம்... (1.1.2022)
நமது தாய்மார்களை நன்றியோடு நினைவு கூர்வோம்...
"முற்றும் துறந்த முனிவர்களாலும் கூட துறக்க முடியாதது தாயன்பு" என்று கூறுவார்கள். வருடத்தின் முதல் நாளாகிய இன்றைய நாளில் நாம் அன்னையை நினைவு கூறுகிறோம் என்றால், அன்னைக்கு நாம் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை இன்றைய நாளில் உணர்ந்துகொள்ள அழைக்கப்படுகின்றோம். தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை. கடவுளால் நேரடியாக பூமிக்கு வர இயலவில்லை. எனவே தான் அதற்கு பதிலாகத் தான், தாயை அனுப்பி வைத்திருக்கிறார் என்றெல்லாம் கூறுவார்கள்.
நமக்காக பல தியாகங்களை முன்னெடுப்பவள் தான் தாய். நாம் பிறப்பதற்கு முன்பாகவே நமது நலனில் அக்கறை கொண்டு தியாகங்கள் செய்யும் தியாகத் தலைவியாக மாறியவள் தான் ஒவ்வொரு தாயும். இன்றைய நாளில் தாயை நினைவு கூருவது தரணியில் கடவுளை நினைவு கூருவதாக கருதப்படுகிறது. வருடத்தின் முதல் நாளான இன்று, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தாய் அன்னை மரியாள், சமூகத்தில் இருந்த பல துன்பங்களுக்கு மத்தியிலும் நமக்காக மாபரன் இயேசு கிறிஸ்து இம்மண்ணில் பிறப்பதற்காக அனைத்து விதமான துயரங்களையும் ஏற்றுக்கொண்டு ஆண்டவரின் கட்டளைக்கு செவி கொடுத்து துன்பத்தை ஏற்று நமது மீட்புக்கு உதவி செய்தார்.
இன்று வாழ்வில் பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டு, தனக்கு எதுவும் இல்லை என்றாலும் தனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அனுதினமும் நமது நலனில் அக்கறை கொள்ளும் நமது தாய்மார்களை, நன்றியோடு நினைவு கூர்ந்து அவர்கள் வழியாக இச்சமூகத்தில் நல்லவொரு மனிதர்களாக நாம் உருவாகிட, அவர்களிடம் இருந்து பாடம் கற்றிட, இன்றைய நாளில் நம்மை அழைக்கும் இறைவனின் குரலுக்கு தன்னார்வ மனதோடு, செவி கொடுத்து வாழ்வில் மாற்றத்தை உருவாக்குவோம்.
வியாழன், 30 டிசம்பர், 2021
ஆழமான நம்பிக்கை கொண்டவர்களா,,,,(31.12.2021)
புத்தாண்டு திருப்பலி முன்னுரை
புதன், 29 டிசம்பர், 2021
நலமான பணிகளை முன்னெடுக்க...(30.12.2021)
செவ்வாய், 28 டிசம்பர், 2021
வாழ்வை உரிமையாக்கிட...(29.12.2021)
மாசில்லா குழந்தைகள் தினம் ...(28.12.2021)
திங்கள், 27 டிசம்பர், 2021
மாசில்லா குழந்தைகளின் விழா...(28.12.2021)
ஞாயிறு, 26 டிசம்பர், 2021
வார்த்தையான இறைவன் வாழ்வாக ...(27.12.2021)
வார்த்தையான இறைவன் ...(27.12.2021)
சனி, 25 டிசம்பர், 2021
திருக்குடும்ப பெருவிழா (26.12.2021)
வெள்ளி, 24 டிசம்பர், 2021
நம்மை புதுப்பிக்கும் கிறிஸ்து பிறப்பு விழா (25.12.2021)
கிறிஸ்து பிறப்பு விழா - 2021
வியாழன், 23 டிசம்பர், 2021
வார்த்தைகளை வாழ்வாக்க...(24.22.2021)
புதன், 22 டிசம்பர், 2021
துன்ப நேரங்களில் துணை அவரே...(23.12.2021)
செவ்வாய், 21 டிசம்பர், 2021
அர்ப்பணம்! என் ஆண்டவருக்கு சமர்ப்பணம்!(22.12.2021)
கிறேன்.
திங்கள், 20 டிசம்பர், 2021
சந்திப்புகளை குறித்துச் சிந்திக்க ...(21.12.2021)
அன்பின் ஆழம் அன்னை மரியா...(21.12.2021)
ஞாயிறு, 19 டிசம்பர், 2021
இறைவனது திட்டத்தை அறிவோம்...(20.12.2021)
இறைவனது திட்டத்தை கண்டுகொள்ள...(20.12.2021)
புனித மார்த்தா விழா! ( 29-7-2024)
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...
-
மன்றாட்டுகள் 1) அன்புத்தந்தையே இறைவா உம் திருஉடலாம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், துறவறத்தார் மற்ற...
-
செபம்: உன்னதங்களிலே உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக. உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்ம...