வியாழன், 30 டிசம்பர், 2021

ஆழமான நம்பிக்கை கொண்டவர்களா,,,,(31.12.2021)

ஆழமான நம்பிக்கை கொண்டவர்களா,,,,

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 

"வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்!" என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப நமக்காக நம்மை தேடி வந்து நம் மத்தியில் பிறந்து இருக்கின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக, நாம் தொடர்ந்து பயணிக்க இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது. வார்த்தை மனுவுருவானார் நம்மிடையே குடிகொண்டார் என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப வார்த்தையான இறைவன் வாக்களித்த வண்ணமாய் நம்மைத் தேடி வந்து நம் மத்தியில் பிறந்து இந்த வருடம் முழுவதும் பலவிதமான இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் மத்தியில் நம்மை வழிநடத்தி, பராமரித்து இருக்கிறார்.  அவரை நன்றியோடு நினைவு கூர்ந்து நன்றியோடு இந்த நாளை நிறைவு செய்ய நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்.  இந்த வருடத்தில் நம்மோடு இருந்த பல உறவுகளை நாம் இழந்திருக்கலாம். நிலவிய கண்ணுக்குத் தெரியாத கொடிய நோயின் தாக்கத்தில் காரணமாக பல உறவுகளை நாம் இழந்திருக்கிறோம். ஆனால் இறைவன் நம்மை விசேஷ விதமாக பாதுகாத்து பராமரித்து வழிநடத்தி வருகிறார். இந்த நல்ல நாளில் அவரது உடனிருப்பை நாம் கண்டு கொள்வோம்.  நம்மைத் தேடி வந்து நம்மோடு நம் மத்தியில் பிறந்து மனிதனோடு மனிதனாக வாழ்ந்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பாதையில் நமது வாழ்வை அமைத்துக் கொண்டவர்களாக ஆழமான நம்பிக்கையோடு அவரது பணியைச் செய்யக் கூடியவர்களாக, அவரது வார்த்தைகளின்படி வாழக் கூடியவர்களாக மாறிட இறைவன் புதிய ஆண்டினை நமக்கு தருகிறார். இறைவன் தருகின்ற அந்த புதிய ஆண்டில், அவரது வார்த்தைகளை வாழ்வாக்கக் கூடிய மனிதர்களாகவும், அந்த இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்க அருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக ஜெபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...