செவ்வாய், 28 டிசம்பர், 2021

வாழ்வை உரிமையாக்கிட...(29.12.2021)

வாழ்வை உரிமையாக்கிட...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு மக்களாகிய நாம் அவரை அறிந்து கொள்வதற்கான ஒரே வழி அவரது கட்டளையை கடைப்பிடிப்பதாகும்.  அவரது கட்டளை என்பது பின்பற்ற இயலாத கடினமான கட்டளை அல்ல, அன்பு கட்டளை.  கண்ணில் காணும் எந்த ஒரு மனிதனையும் நாம் அன்பு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதே அந்த கட்டளை ஆகும்.  

அந்த கட்டளைக்கு ஏற்ப நாம் வாழுகின்ற போது, இறைவனை அறிந்து கொள்ள முடியும்.  இந்த கட்டளைகளை பின்பற்றி வாழுகின்றவர்கள் எல்லாம் ஒளியில் வாழக்கூடியவர்களாக கருதப்படுகிறார்கள். 

      இன்று ஒளியில் வாழ்கிறேன் எனச் சொல்லிக்கொண்டு, தம் சகோதரர் சகோதரிகளை மன்னிக்காது வாழக்கூடியவர்கள் எல்லாம் ஒளியில் வாழ்வதாக சொல்லிக்கொண்டு இருளில் வாழ்பவர்கள் என  குறிப்பிடுகிறது, இன்றைய முதல் வாசகம்.  இவ்வாசகத்திற்கு ஏற்ப நமது வாழ்வை நாம் சீர்தூக்கிப் பார்க்க அழைக்கப்படுகிறோம். 

 நற்செய்தி வாசகத்தில் கூட  பிறந்த இயேசுவை சிமியோன் கையில் ஏந்தி இறைவாக்கு உரைத்தார்.  இந்த குழந்தை பலரின் வீழ்ச்சிக்கும் பலரின் எழுச்சிக்கும் காரணமாக அமையும் என்றார்.  யாருடைய வீழ்ச்சி யாருடைய எழுச்சி என சிந்திக்கின்ற போது இந்த குழந்தையானது அன்று சமூகத்தில் நாங்கள் மட்டுமே நல்லவர்கள் நாங்கள் மட்டுமே கடவுளின் கட்டளையை பின்பற்றுபவர்கள், கடவுளுக்கு உரியவர்கள் எனச் சொல்லிக்கொண்டு மக்களை அடக்கி ஆளக்கூடிய பணியை செய்து கொண்டிருந்த ஒளியில் வாழ்வதாக சொல்லிக்கொண்டு இருளில்
வாழ்ந்து கொண்டிருந்த அதிகார வர்க்கத்தினரை ஆதிக்க சக்தியினரின் சக்திகளின் வீழ்ச்சிக்கும் சராசரி சாதாரண மனிதர்களின் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும் என புரிந்து கொள்ளலாம்.  

ஒருவர் மீது குற்றம் காண துவங்கினால் அவரை அன்பு செய்வதற்கான நேரம் இருக்காது எனக் கூறுவார்கள். குற்றம் காண்பதை தவிர்த்து ஒருவர் மற்றவரை செய்வோம்.


        இன்று  நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நமது வாழ்வை இந்த இறை வார்த்தைகளின் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்ப்போம்‌.  நாம் ஒளியில் வாழக்கூடிய மக்களாக திகழ வேண்டுமாயின் இறைவனது வார்த்தைகளுக்கு செவி கொடுத்து அவரது கட்டளையை பின்பற்றக் கூடியவர்களாக ஒருவர் மற்றவரை மன்னித்து அன்போடு வாழ அழைக்கப்படுகிறோம்.  இத்தகைய வாழ்வே இறைவனுக்கு உகந்த வாழ்வாக கருதப்படுகிறது. இத்தகைய வாழ்வை நாம் நமது உரிமையாக்கிக் கொள்ள இறைவனது அருளை இணைந்து இந்த திருப்பலியில் வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...