வியாழன், 30 டிசம்பர், 2021

புத்தாண்டு திருப்பலி முன்னுரை

புத்தாண்டு திருப்பலி
முன்னுரை

இறைவன் படைத்த இந்த அழகிய உலகத்தில் நாம் எப்போதும் மகிழ்ந்திருக்க அடுத்தவரையும் மகிழ்விக்க ஆசிகளை வழங்க ஆசிகளைப் பெற்றுக் கொள்ள ஆண்டவர் நமக்கு புதியதொரு ஆண்டினை இன்று தந்துள்ளார்.

இந்த புதிய ஆண்டில் இறைவன் நமக்கு ஆசிகள் பலவற்றை தந்து இனி வருகின்ற நாட்களில் நம்மை வழிநடத்த இருக்கின்றார்.
இந்த நல்ல நாளை திருஅவை  இயேசுவின் தாய் மரியா என்பதை   நினைவுகூர்ந்து சிறப்பிக்க நமக்கு அழைப்பு தருகின்றது 

நம்மிடையே  இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கக்கூடிய கொடிய நோயின் அச்சத்தில் இருந்தும், தனித்து வாழும் தனிமை உணர்விலுருந்தும் நம்மை விடுவித்து, நமக்கு வேண்டியதை செய்து நம்மை காக்கின்ற பணியில் இறைவன் அன்று இஸ்ரயேல் மக்களே  பகலில் மேகத்தூணாகவும், இரவில் நெருப்பு தூணாகவும் இருந்து காத்தது போல பிறந்துள்ள இப்போதைய ஆண்டில் இறைவன் நம்மை காத்து நமக்கு ஆசிகளைத் தந்து நம்மை ஆசியாக இவ்வுலகத்தில் விளங்கச் செய்யவுள்ளார்.

இந்த இறைவனை நம்பிக்கையோடு எதிர்கொள்வோம்... பிறந்துள்ள இந்த புதிய ஆண்டில் அவரது ஆசிகளைப் பெற்று செல்வோம்.... நாம் பெற்ற ஆசிகளை ஒருவர் மற்றவரோடு பகிர்ந்து கொள்வோம்... இதற்கான அருளை வேண்டி இன்றைய நாள் திரு வழிபாட்டில் பக்தியோடு பங்கெடுப்போம்.




மன்றாட்டுக்கள்

1. அன்பே உருவான இறைவா எம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவியர் அனைவரையும் பிறந்துள்ள புதிய ஆண்டில்  நீர்  அவர்களை  உமது  பாதுகாப்பில் வைத்து பராமரித்துக் கொள்ளும் ...அவர்களுக்கு நல்ல உடல் உள்ள சுகம் தந்து அவர்கள் முன்னெடுக்கின்ற பணிகளில் அவர்களோடு இருந்து உமது மக்களை நல்வழிப்படுத்த அவர்களுக்கு தேவையான ஆற்றலை உமது பிறப்பு அவர்களுக்கு தர வேண்டுமாய் இந்நேரத்தில் இறைவா உம்மை நோக்கி வேண்டுகிறோம் .

2. பாலன் இயேசுவே! பிறந்துள்ள இப்போதைய ஆண்டில் எமது நாட்டை ஆளும் தலைவர்களை உமது பாதம் அர்பணிகின்றோம். அவர்கள் தன்னலம் துறந்து பொது நலத்தோடு ஒருவர் மற்றவருக்கு தேவையான செய்து மக்களின் நலனை காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை  மன்றாடுகிறோம்.  

3. ஆற்றல் தருகின்ற ஆண்டவரே இன்று புதிதாய் பிறந்துள்ள புதிய ஆண்டில்  இந்த அகிலத்தில் நிலவுகின்ற இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில் எங்களுக்கு நம்பிக்கையையும், எங்கள் வாழ்வில் அமைதியையும் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.  அன்பு இறைவா எம் பங்கில் இருக்கின்ற அனைவருக்காகவும் பிறந்துள்ள புதிய ஆண்டில்  மன்றாடுகின்றோம். எங்களை ஒவ்வொரு நாளும் பாதுகாத்து, பராமரித்து நல்லதொரு குடும்பமாக உமது வார்த்தையின்படி வாழக்கூடிய மக்களாக எங்களை வழி நடத்திட எங்களுக்கு தேவையான ஆற்றலை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

5. ஆசிகளை வழங்கி எங்களை நல்வழி நோக்கி நடத்துகின்ற அன்பு இறைவா புதிய ஆண்டில் நாங்கள் பெற்றுக் கொண்ட ஆச்களை பிறரோடு பகிர்ந்து கொள்ளவும் உமது ஆசியை பெறக்கூடிய வகையில் தகுதியான மக்களாக ஒவ்வொரு நாளும் வாழவும் உமது அருளை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


1 கருத்து:

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...