"பயணம் இனிதாகட்டும்..."
மனித வாழ்வில் இலட்சியம் என்பது அவசியம். இலட்சியம் இல்லாத வாழ்வு குறிக்கோள் இல்லாத ஒரு பயணமாகும். வாழ்வில் இலட்சியம் வேண்டும். இலட்சியத்தை அடைய குறிக்கோள் அவசியமானது. குறிக்கோளை அடைவதற்கு விழிப்போடு இருத்தல் மிகவும் அவசியமாகும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, பணியாளர்கள் எப்படி விழிப்புடன் இருக்க வேண்டும்? என்பது பற்றி கூறுகிறார். இலட்சியம் இல்லாத, குறிக்கோள் இல்லாத, விழிப்போடு செயல்படாத ஒரு பணியாளனால் என்ன விளைவுகள் ஏற்படும்? அதனால் அவனுக்கு வரும் துன்பங்கள் என்ன? என்பது பற்றி விழிப்பாய் இருக்க மறுத்த பணியாளர்களை பற்றி இயேசு இன்றைய நற்செய்தி வாசகங்கள் வழியாக நமக்கு உணர்த்துகிறார் . எனவே இன்றைய நாள் நற்செய்தி வாசகங்கள் வழியாக இவ்வுலகில் உள்ள அனைவரும் விழிப்போடு இருந்து இலட்சியத்தை நோக்கி பயணிக்க அழைக்கப்படுகிறோம்.
இன்று கொரனொ தொற்றுநோய் அச்சத்தின் காரணமாக அரசு கூட விழித்திரு....
வீட்டிலிரு....
என்றுதான் முழங்குகின்றது.
வீட்டில் இருக்கக் கூடிய பணியாளர்கள், விழிப்போடு இருந்து வீட்டை காப்பது போல நமது வாழ்விலும் நாம் நமது வாழ்வின் இலட்சியத்தை மனதில் கொண்டு, அதை அடையும் குறிக்கோளை அனுதினமும் விழிப்போடு எதிர்கொண்டு வாழ்வில் இலட்சியத்தை அடைந்திட இறை அருளை நோக்கி ஆண்டவர் இயேசுவின் பாதையில் பயணிப்போம்.
"பயணம் இனிதாகட்டும்..."
கண்களும் இதயமும் விழித்திருந்து வழி நடந்தால் பயணம் இனிதாகும்! இன்றைய கருத்தும் கதையும் மிகவும் அருமை!
பதிலளிநீக்குஉறங்கும் போதும் கூட ஒரு கண் விழித்திருக்கட்டும்..
பதிலளிநீக்கு