ஞாயிறு, 11 டிசம்பர், 2022

இறைத் திருவுளத்தை அறிந்து நிறைவேற்றுவோம்! (01-12 -22)

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!  

இன்றைய இறைவார்த்தையானது கடவுளின்   திருவுளத்தை அறிந்து அதனை நிறைவேற்றுகின்ற மனிதர்களாக நாம் இருப்பதற்கான அழைப்பை தருகிறது. கடவுளின் வார்த்தைகளை நம் வாழ்வாக நாம் மாற்றுகின்ற போது, அவரின் திருவுளத்தை நிறைவேற்றுகின்ற மனிதர்களாக  இம்மண்ணில் நாம் வலம் வர முடியும். அத்தகைய ஒரு வாழ்வு நம் வாழ்வாக அமைகிற போது, பாறையின் மீது அடித்தளம் இடப்பட்ட வாழ்வாக நமது வாழ்வு மாறும்.

   எத்தனையோ இடர்பாடுகளும் இன்னல்களும் எதிர்பாராத நேரங்களில் நம்மை நோக்கினாலும், நாம் ஆண்டவர் மீது அடித்தளம் இடப்பட்டிருப்பதால் அசைவுறாது நிலைத்து நிற்க முடியும் என்பதை இன்றைய இறைவார்த்தை வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம். 

        இந்த இறைவனின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்று அதற்கு செயல் வடிவம் தருவதன் வழியாக கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றும் ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறை வேண்டலில் ஈடுபடுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...