சனி, 24 டிசம்பர், 2022

விண்ணில் இருந்து விடியல் நம்மை தேடி வருகிறது.(24-12-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
செக்கரியா கடவுளை போற்றி புகழ்ந்ததை இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம். கடவுள் சொன்ன வார்த்தைகள் நிறைவேறுமா என்ற ஐயம் உள்ளத்தில் எழுந்த போது, கடவுளின் வார்த்தைகள் செயல் வடிவம் பெறுகின்ற வரை நீ பேச்சற்றவனாய் இருப்பாய் என்று வான தூதர் கூற, அதன் அடிப்படையில் பேச்சிழந்த நபராக அவர் இருந்தார். கடவுள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் நிறைவேறிய போது, அவர் மீண்டும் நாவன்மை பெற்றவராக,  கடவுள் செய்த அளப்பரிய காரியத்தை எண்ணி, அவரை போற்றி புகழக் கூடியவராக, இருப்பதை இன்றைய வாசகம் வாயிலாக நாம் உணர்ந்து கொள்கிறோம். இந்த வாசகத்தின் அடிப்படையில் நமது வாழ்வை நாம் சீர்தூக்குகிற போது, இன்னல்களும் இடையூறுகளும் ஏற்பட்டபோது பல நேரங்களில், இதனை நம்மால் எதிர்கொள்ள முடியுமா என்ற கலக்கம் நம்மில் மேலோங்கி இருக்கலாம். 

    ஆனால் கண்ணுக்குத் தெரியாத கடவுள் இந்த பிரச்சனைகளை கடந்து வருவதற்கான ஆற்றலை கொடுத்து நம்மை அத்துன்பத்திலிருந்து மீட்டெடுத்திருக்கின்றார். அப்படி அவர் நம்மை மீட்டெடுத்த தருணங்களை எல்லாம் நன்றியோடு நினைவு கூர்ந்து, அந்த கடவுளுக்கு நன்றி சொல்லுகின்ற மனிதர்களாக நீங்களும் நானும் நாளும் வளர்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...