சனி, 10 டிசம்பர், 2022

ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளின் மீது ஆழமான நம்பிக்கை கொள்வோம்! ( 28-11-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 

         இன்றைய இறை வார்த்தையானது நூற்றுவர் தலைவன் கொண்டிருந்த நம்பிக்கையை நாம் உணர்ந்து கொள்ள அழைப்பு விடுக்கிறது. வெறுமனே நூற்றுவர் தலைவன் கொண்டிருந்த நம்பிக்கையை நாமும்  கொண்டிருக்க வேண்டும் என்ற மனநிலையோடு மட்டும் கடந்து விடாமல் நூற்றுவர் தலைவன் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளின் மீது எந்த அளவிற்கு ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை சிந்திக்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம். 

      நான் உன் வீட்டிற்கு வந்து உன் பையனுக்கு நலன் தருகிறேன் என்று இயேசு சொன்னபோது கூட, நீர் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் என் மகன் பிழைத்துக் கொள்வான் என்று சொல்லுகிற அளவிற்கு ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட ஒரு மனிதனாக நூற்றுவர் தலைவன் இருந்தார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம். 

       இத்தகைய ஒரு சிந்தனையோடு நாம் ஆண்டவரின் வார்த்தைகளின் மீது இது எந்த அளவிற்கு நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றோம் என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்த்து, ஆண்டவரின் வார்த்தைகள்
 ஆற்றல் வாய்ந்தவை; இரு பக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானவை. இந்த வார்த்தைகளின் வல்லமையை உணர்ந்து கொண்ட மனிதர்களாக இந்த இறைவனின் வார்த்தையை வாழ்வாக்க அருள் வேண்டி தொடர்ந்து இறை வேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...