சனி, 24 டிசம்பர், 2022

என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? (21-12-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
               வார்த்தைகள் வலிமை வாய்ந்தவை. வார்த்தைகளால் ஒருவருடைய மனதை காயப்படுத்தவும் முடியும், குணப்படுத்தவும் முடியும் என்பார்கள். இன்று மரியாவின் வார்த்தைகள் எலிசபெத்தை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியதை நாம் வாசிக்க கேட்டோம். அதுபோல முதன் முதலாக மரியாவை ஆண்டவரின் தாய் என்று குறிப்பிட்டதும் எலிசபெத்தம்மாள். 

       வார்த்தைகள் வலிமை வாய்ந்தவை. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இடம்பெறுகின்ற வார்த்தைகள் அனைத்துமே ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியை உருவாக்குகின்றன. இந்த இறை வார்த்தையோடு நமது வாழ்வை ஒப்பிட்டு பார்க்கிற போது, நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகள் எவருக்கு எத்தகைய உணர்வுகளை உருவாக்குகிறது என சிந்திக்க நாம் அழைக்கப்படுகின்றோம். நமது வார்த்தைகளால் அடுத்தவரை மகிழ்விக்கவும், ஆண்டவரை மகிழ்விக்கவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தவர்களாக, நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகளை குறித்து மிகவும் கவனமாக இருப்பதற்கு, இன்றைய நாள் இறை வார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது. ஆண்டவரின் வார்த்தைகளை ஆர்வத்தோடு எடுத்துரைப்போம். இந்த ஆண்டவரின் வார்த்தைகள் அடுத்தவருக்கு மகிழ்ச்சியை உருவாக்கும். மகிழ்வை உருவாக்கும் வார்த்தைகளை நமது வார்த்தைகளாக மாற்றிக் கொண்டு இந்த சமூகத்தில் ஒருவர் மற்றவரோடு இணைந்து, இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்க முயல்வோம். அதற்கான அருளை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறை வேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...