சனி, 24 டிசம்பர், 2022

இதோ! கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.(20-12-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

             ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அறிவிக்கப்படுவதை இன்றைய வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம். கடவுளின் தூதர் சொன்ன வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு கடவுளின் திட்டத்திற்கு தன்னை முழுவதுமாக அன்னை மரியா கையளித்தார். இந்த அன்னை மரியாவை போல நாமும் கடவுளின் திட்டத்திற்கு தன்னை கையளிக்க கூடிய மனிதர்களாக இருக்க வேண்டும் என்பதைத்தான் இன்றைய நாள் இறை வார்த்தைகள் நமக்கு வலியுறுத்துகின்றன. கடவுள் மனிதன் மீது கொண்ட அன்பின் காரணமாக மனிதனை தேடி வந்தார். நம்மை தேடி வந்த இறைவன் நமது வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்பதை தன் சொன்னாலும் செயலாலும் நமக்கு முன்மாதிரியாக இருந்து, வாழ்ந்து காட்டினார். 

       இந்த இயேசுவை பின்பற்றக்கூடிய நாம் ஒவ்வொருவருமே, கடவுளின் திட்டத்தை உணர்ந்தவர்களாக, நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு ஆண்டவர் இயேசுவை பின்பற்றுகின்ற நாம் அவரிடம் காணப்பட்ட அனைத்து பண்பு நலன்களையும் நமது பண்பு நலன்களாக கொண்டு, கடவுளின் திட்டத்திற்கு செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாக நாளும் இச்சமூகத்தில் வளர்வதற்கான ஆற்றலை வேண்டி, இன்றைய நாளில் இறைவேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...