ஞாயிறு, 4 டிசம்பர், 2022

ஆண்டவரின் வார்த்தைகள் ஒருநாளும் அழிவுறாது! (25-11-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்! 

       ஆண்டவரின் வார்த்தைகள் ஒரு நாளும் அழிவுறாது. இந்த வார்த்தைகளை நமது வாழ்வாக மாற்றிக்கொண்டு ஒவ்வொரு நாளும் நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை, இறைவன் இன்று நமக்கு வலியுறுத்துவதை நாம் நற்செய்தி வாசகத்தின் வாயிலாக வாசிக்க கேட்கின்றோம். ஆண்டவரின் வருகையை குறித்து ஆவலோடு எதிர்நோக்கி இருக்க கூடிய நாம் ஒவ்வொருவருமே இந்த மண்ணில் வாழுகிற போது கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை நமது வாழ்வாக அமைத்துக் கொள்ள அழைப்பு தரப்படுகிறது. 

      பொதுவாகவே திருவருகை காலத்திற்கு முன்பாக பொதுக்காலத்தில் ஆண்டவரின் வருகையை குறித்து ஆழமாக சிந்திக்கின்றோம். ஆண்டவர் வருகையின் போது இது நாள் வரை தவறிழைத்தவர்களுக்கு எல்லாம் தண்டனைகள் வழங்கப்படும்.   இது நாள் வரை நீதியின் பொருட்டு துன்புறுத்தப் படுவோருக்கெல்லாம் மீட்பு வழங்கப்படும் என்ற செய்தியினை, திருவெளிப்பாட்டு நூலில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது. ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்வை நாம் வாழுகிற போது, ஆண்டவரின் நாள் வருகிற போது, அவரை எதிர்கொண்டு செல்லுகிற போது, நாம் அவருக்கு உகந்த ஒரு மனிதர்களாக அவரது திருமுன்னிலையில் நின்று அவரை புகழக் கூடிய மனிதர்களாக, நாமும் இருக்க முடியும் என்பதை இன்றைய முதல் வாசகம் வாயிலாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். நமது வாழ்வை ஆண்டவரின் வார்த்தைகளின் மீது நம்பிக்கைக்குரிய ஒரு வாழ்வாக அமைத்துக் கொண்டு நாளும் கடவுள் விரும்புகின்ற  மனிதர்களாக நாம் வாழ இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...