சனி, 24 டிசம்பர், 2022

இறையன்பில் மகிழ்வோம். (18-12-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
      திருவருகைக் காலத்தின் நான்காம் வாரமாகிய இன்று நாம் அன்பு என்ற மெழுகு திரியை ஏற்றி, அன்பை குறித்து சிந்திக்க நாம் அழைக்கப்படுகின்றோம். கடவுள் நம்மை அன்பு செய்தார். அதன் அடிப்படையில் தான் மனிதனாக அவர் இம்மண்ணில் உருவெடுத்தார். இந்த இயேசுவின் பிறப்புச் செய்தி அறிவிக்கப்படுவதைத் தான் நாம் இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம். 

       இந்த ஆண்டவர் நம் மீது அன்பு கொண்டவர். எப்போதும் நம்மோடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அந்த அடிப்படையில் தான் இந்த இயேசுவின் பிறப்பை ஆவலோடு எதிர்நோக்கி நாமும் நம்மை ஆயத்தமாக்கி கொண்டு இந்த ஆண்டவர் இயேசுவின் பிறப்புக்காக காத்திருக்கிறோம். இந்த இயேசுவை சோதிக்கும் மனநிலையோடு நமது வாழ்வு எப்போதும் இருத்தல் ஆகாது என்பதை தான் இன்றைய முதல் வாசகம் நமக்கு வலியுறுத்துகிறது. 

          மனிதர்களை சோதிப்பது போலவே பல நேரங்களில் கடவுளின் அன்பையும் சோதிக்க கூடியவர்களாக  நம்மில் பலரும் இருக்கலாம். ஆனால், நாம் கடவுளை சோதிக்கின்ற நபர்களாக இருக்காமல், நம் மீது கொண்ட அன்பின் அடிப்படையில் நம்மை தேடி வந்து, இந்த மண்ணுலகில் தனது இன்னுயிரை தியாகம் செய்தார் என்பதை உணர்த்த நபர்களாக, அவரது அன்பை உணர்ந்தவர்களாக நாளும், அந்த அன்பினை நாமும் சக மனிதர்களோடு பகிர்ந்து, அன்போடு வாழ இன்றைய நாள் இறை வார்த்தை வழியாக அழைக்கப்படுகின்றோம். அன்பே உருவான இறைவன் அன்போடு வாழ நம்மை தேடி வந்தார். இந்த தேடி வந்த இறைவனை ஏற்றுக் கொள்ள, நம்மை நாமே ஆயத்தமாக்கிக் கொண்டு, அன்போடு அனைவரையும் அணுகுவதற்கான ஆற்றல் வேண்டியவர்களாய், இன்றைய நாளில் இறைவேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...