ஞாயிறு, 11 டிசம்பர், 2022

புனித அந்திரேயா! (30-11-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

      இன்று நாம் தாய்த்திரு அவையோடு இணைந்து புனித அந்திரேயாவை நினைவு கூருகின்றோம். அன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்களை, என் பின்னே வாருங்கள்! நான் உங்களை மனிதர்களை பிடிப்பவர் ஆக்குவேன் என்று சொன்னார். 
      இயேசுவின் இந்த வார்த்தைகளைக் கேட்டு தங்களிடம் இருந்த அனைத்தையும் விட்டு விட்டு இந்த இயேசுவை பின்பற்றுகின்ற மனிதராக இந்த அந்திரேயா தனது வாழ்வை அமைத்துக் கொண்டார். இவரை நினைவு கூருகின்ற இந்த நல்ல நாளில், நாம் நமது வாழ்வை இந்த அந்திரேயாவின் வாழ்வு போல அமைத்துக் கொள்ள அழைக்கப்படுகின்றோம். ஆண்டவரோடு கொண்டுள்ள அன்பு உறவில் நிலைத்திருப்பவர்களாக, அவரின் திருவுளத்தை அறிந்து, அதனை நிறைவேற்றுகின்ற மனிதர்களாக, நாம் இந்த ஆண்டவர் இயேசுவை நாடிச் செல்ல அவரது அன்புப் பணியை அகிலத்தில் நாம் செய்து, இறைவனுக்கு உகந்த மனிதர்களாக வாழ ஆற்றல் வேண்டி, இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறை வேண்டலில் ஈடுபடுவோம். 
            இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...