வியாழன், 29 டிசம்பர், 2022

பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி! (29-12-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 கடவுள் மனிதனை சந்திப்பதற்காக மனித வடிவம் எடுத்துப் பிறந்தார். இந்த குழந்தையை ஏந்தியவர்களாக மரியாவும் சூசையும் ஆண்டவரின் இல்லத்திற்கு சென்று கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார்கள். 
யூத சட்டங்கள் உருவாக்கி வைத்திருந்த அனைத்தையும் இயேசுவுக்காக அப்படியே பின்பற்றுகிறார்கள். 
   இந்த இயேசுவை தன் கைகளில் ஏந்திய மூத்த நபராகிய சிமியோன், கடவுளைக் கண்டு கொண்டவராக, கடவுளை போற்றிப் புகழுகின்றார். 

            இன்றைய நற்செய்தி வாசகத்தை நாம் நமது வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்கிற போது, மண்ணில் பிறக்கின்ற குழந்தைக்காக நன்றி சொல்லி நமது பெற்றோரும் நம்மை சுமந்து கொண்டு ஆலயம் வந்தார்கள். நாமும் நமது குழந்தைகளை சுமந்து கொண்டு ஆலயம் வந்து கொண்டிருக்கிறோம். ஆலயம் வருவதன் நோக்கம் கடவுள் தந்த இந்த குழந்தைகளுக்காக நன்றி சொல்வது. 

      நன்றி சொல்வதோடு நின்று விடுவதல்ல நம் வாழ்வு. கடவுள் தந்த விலை மதிப்பில்லாத பரிசாகிய இந்த குழந்தைகளை நாம் நல்லதொரு முன்மாதிரிகளாக இருந்து, இயேசுவைப்போல பெற்றோருக்கு கீழ்ப்படிந்து, அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்குகின்ற குழந்தைகளாக, வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து கொள்வதற்கு இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக நாம் அழைக்கப்படுகிறோம். 
         மண்ணிற்கு வருகிற ஒவ்வொரு குழந்தையுமே ஆண்டவர் இயேசுவின் செய்தியை கொண்டு வருகிறது. இந்தக் குழந்தைகளை கடவுளுக்கு உகந்த குழந்தைகளாக வளர்த்தெடுப்பதற்கான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறை வேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...