சனி, 10 டிசம்பர், 2022

இறை உறவில் நெருங்கி வளர்வோம்! (29-11-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 

      இன்றைய இறை வார்த்தைகள் அனைத்துமே தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள உறவை குறித்து நாம் சிந்திக்க அழைப்பு தருகிறது. எப்படி இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது கடவுளின் திருவுளத்தை உணர்ந்து வைத்திருந்தாரோ அந்த கடவுளோடு நெருங்கிய உறவு கொண்டிருந்தாரோ, அதுபோல நீங்களும் நானும் இறைவனோடு இணைந்து இருக்க வேண்டும் என்பதைத்தான் இன்றைய இறை வார்த்தைகள் நமக்கு வலியுறுத்துகின்றன. இந்த இறை வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை நாம் கடவுளோடு அமர்ந்தவர்களாக ஒப்பிட்டுப் பார்ப்போம். 

              நமது செயல்கள், சொல் அனைத்துமே கடவுளோடு உள்ள உறவில் இன்னும் நாம் ஆழப்பட்ட உதவி செய்கின்றனவா? அல்லது நாம் கடவுளோடு உள்ள உறவிலிருந்து அந்நியப்பட்டவர்களாக நாம் நிற்கின்றோமா? நமக்குள் கேள்வியை எழுப்பி பார்த்து நம்மை நாமே சரி செய்து கொண்டவர்களாக தந்தைக்கு மகனுக்கும் இடையே இருந்த அந்த அன்புறவை நாமும் வளர்த்துக் கொள்ள ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறை வேண்டலில் ஈடுபடுவோம். 
            இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...