ஞாயிறு, 11 டிசம்பர், 2022

நம்பிக்கையில் மலர்ந்திடுவோம்! (02-12-22)

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!  

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம்பிக்கையோடு பார்வையற்ற இருவர், ஆண்டவரே! தாவீதின் மகனே! எங்களுக்கு இறங்கும் என கத்திக்கொண்டே இயேசுவைப்பின் தொடர்ந்தார்கள் என வாசிக்கின்றோம். பார்வையற்ற அந்த நபர்களிடமிருந்த ஆழமான நம்பிக்கை அவர்களை இயேசுவைப் பின் தொடர வைத்தது. அதே நம்பிக்கையோடு இன்று நாம் இருக்கிறோமா என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்த்து, ஆண்டவரின் வருகைக்காகவும் இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்காகவும் நம்மை தயாரித்துக் கொண்டிருக்கின்ற இந்த நாட்களில், பார்வையற்ற நபர்களிடம் காணப்பட்ட நம்பிக்கை நம்மிலும் மலர வேண்டும்.  நாமும் நம்பிக்கையோடு இயேசுவை பின் செல்ல வேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தை வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம்.  நம்பிக்கையோடு ஆண்டவரை பின் தொடர்ந்து அவரிடமிருந்து பல நலன்களை பெற்றுக் கொள்ள ஆற்றல் வேண்டி இறைவனிடத்தில் 

இன்றைய நாளில்  இறை வேண்டல் செய்வோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...