ஞாயிறு, 4 டிசம்பர், 2022

ஆண்டவரின் வார்த்தைகளை இதயத்தில் இருத்துவோம்! ( 24-11-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்! 

       ஆண்டவரின் நாளை குறித்து ஆவலோடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கக்கூடிய நாம் ஒவ்வொருவருமே இந்த மண்ணில் வாழுகிற ஒவ்வொரு நாளும்  ஆண்டவரின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தியவர்களாய் ஆண்டவரின் வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாக நாளும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அழைப்பை இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு தருகின்றார்.

          திடீரென குழப்பங்களும் போர் முழக்கங்களும் இயற்கை சீற்றங்களும் எழுகின்ற போது, அஞ்சி, நடுங்கி, கலக்கமுறுவதற்கு பதிலாக, கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை இது நாள் வரை அமைத்துக் கொண்டிருக்கிறோம். எனவே துணிவோடு ஆண்டவரை எதிர்கொள்ள ஆயத்தமான நபர்களாக விழிப்போடு இருப்பதற்கான அழைப்பு இன்றைய இறைவார்த்தை வழியாக நமக்கு தரப்படுகிறது.  

    இன்னல்களும் இக்கட்டுகளும் துன்பங்களும் சூழ்கின்ற போது, தலை நிமிர்ந்து நிற்பதற்காக இறைவன் இன்றைய இறைவார்த்தை வழியாக, நம்பிக்கை ஊட்டுவதை நாம் நற்செய்தி வாசகத்தில் வாசிக்கக் கேட்கிறோம். 

       இந்த வாசகங்களின் அடிப்படையில் நாம் நமது வாழ்வை சீர்தூக்கி பார்க்கின்ற போது, கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை நாம் வாழ்ந்து இருக்கிறோம் என்றால், நாம் தொடர்ந்து அவ்வாழ்வை நம் வாழ்வாக மாற்றிக் கொள்வோம். ஒருவேளை கடவுளின் வார்த்தைகளை வாழ்வாக்க தவறி இருக்கிறோம் என்றால், நம்மை நாமே சரி செய்து கொண்டு, ஆண்டவரின் வருகைக்கு ஆயத்தமாவதற்கான ஒரு அழைப்பினை இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு தருகிறார். இந்த இறைவனின் அழைப்பிற்கு செவி கொடுத்தவர்களாய், நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்வை எப்போதும் வாழ்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில், இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...