சனி, 24 டிசம்பர், 2022

திருமுழுக்கு யோவானின் பிறப்பு. (23-12-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 
 
               கடவுளின் வார்த்தைகள் செயல் வடிவம் பெறுவதை இன்றைய இறை வார்த்தைகள் வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம். அன்று ஆண்டவரின் தூதர் செக்கரியாவுக்கு தோன்றி சொன்ன வார்த்தைகள் அனைத்துமே யோவானின் பிறப்பில் முழுமை பெறுகின்றன. கடவுள் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் செயல் வடிவம் பெறுவதை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக நாம் உணர்ந்து கொள்கிறோம். நாமும் அனுதினமும் ஆண்டவரின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்கிறோம். இந்த வார்த்தைகள் வெறுமனே கேட்பதற்கானது மட்டுமல்ல. செயல் வடிவப்படுத்தப்பட வேண்டியது என்பதை உணர்ந்து கொண்டவர்களாக, கடவுளின் வார்த்தைகளின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு, அந்த வார்த்தைகளை வாழ்வாக்குவதற்கான முயற்சியில் நாம் அனுதினமும் ஈடுபட கடமைப்பட்டிருக்கிறோம். கடவுளின் வார்த்தை எத்தகைய மனநிலை படைத்தவர்களாக நாம் இருந்தாலும், நம் மனநிலைக்கு ஏற்றவாறு ஆறுதல் தரக்கூடியதாக அமையும். இந்த ஆறுதலான வார்த்தைகளை மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக, கடவுளின் திருவுளத்தை அறிந்த மனிதர்களாக, அவரின் வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாக, நீங்களும் நானும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள, இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறை வேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...