செவ்வாய், 13 செப்டம்பர், 2022

இறப்பிலும் உயிர்ப்பு சாத்தியமே! (13-9-22)


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!


                 இன்றைய இறைவார்த்தைப் பகுதியானது,  நாம் உடலால் தனித்து இருந்தாலும், உள்ளத்தால் ஆண்டவர் இயேசுவோடு ஒன்றிணைந்திருக்கிறோம் என்பதை வலியுறுத்துகிறது. ஆண்டவர் இயேசுவோடு ஒன்றிணைந்து இருக்கக்கூடிய நாம் ஒவ்வொருவருமே ஒவ்வொரு நாளும் நம்பிக்கை நிறைந்த மனிதர்களாக வளர வேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தை நமக்கு எடுத்துரைக்கிறது.

       நம்பிக்கையின் அடிப்படையில் நாம் செயல்படுகிற போது,  நம் நம்பிக்கையின் நிமித்தமாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து பலவிதமான வல்ல செயல்களை நமது வாழ்வில் செய்ய வல்லவர் என்பதை,  நீங்களும் நானும் உணர்ந்து கொள்ள இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம். 


         இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறந்து போன ஒரு விதவை தாயின் மகனுக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்து உயிர் கொடுக்கின்றார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது கொள்ளுகின்ற ஆழமான நம்பிக்கை,  இறப்பிலும் உயிர்ப்பை சாத்தியமாக்கும் என்பதை நமக்கு இன்றைய இறைவார்த்தை வழியாக வழங்குகிறது.

       இறைவன் தருகின்ற இந்த இறை வார்த்தைகளின் அடிப்படையில் நமது உள்ளத்தில் ஆண்டவர் மீதான ஆழமான நம்பிக்கையை விதைத்துக் கொண்டவர்களாக நாளும் பயணம் செய்ய இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...