செவ்வாய், 6 செப்டம்பர், 2022

ஆண்டவர் இயேசுவை அறிக்கையிடுவோம்! (3-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 

          ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது, பலவிதமான பாடங்களை தம் சீடர்களுக்கு கற்பித்தார். சின்னஞ்சிறிய உவமைகள் வாயிலாகவும், பல நிகழ்வுகள் வாயிலாகவும், வாழ்வுக்கான பாடத்தை கற்பித்தார். இந்த கற்பித்தலை உள்வாங்கிக் கொண்ட இயேசுவின் சீடர்கள், உலகெங்கும் சென்று அதை மற்றவர்களுக்கு அறிவிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களின் அடிப்படையில் நாமும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பற்றி நாளும் அறிந்திருக்கிறோம்.  நாம் அறிந்திருக்கின்ற ஆண்டவர் இயேசுவைக் குறித்து அறிக்கை இடுகின்ற மனிதர்களாக நாம் இருக்கின்றோமா? என்ற கேள்வியை எழுப்பிப் பார்ப்பதற்கான ஒரு அழைப்பை இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு தருகின்றார்.

           இறைவன் தரக்கூடிய இந்த அழைப்பினை இதயத்தில் ஏற்றுக்கொண்ட மனிதர்களாக, நாம் அறிந்திருக்கின்ற ஆண்டவரைப் பற்றி அறிவிப்பவர்களாகவும், அவரின் வார்த்தைகளை வாழ்வாக்குகின்ற மனிதர்களாகவும் நாம் இச்சமூகத்தில் இருக்கின்றோமா என்ற கேள்வியை இன்று எழுப்பி பார்ப்போம். ஆண்டர் இயேசு கிறிஸ்துவை அறிந்திருக்கின்ற நாம், அவரிடம் காணப்பட்ட இறையாட்சியின் மதிப்பீடுகளான அன்பையும், சமத்துவத்தையும், சமூக நீதியையும் நமது வாழ்வில் நமது செயல்கள் மூலமாக பின்பற்றக்கூடிய மனிதர்களாக இருப்பதற்கான ஆற்றலை  வேண்டி இறைவனிடத்தில் இன்றைய நாளில் மன்றாடுவோம்.  இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 


      
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...