இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
நாம் ஏற்றுக் கொண்ட ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காக அனைத்தையும் இழக்கத் துணிந்த உண்மையான சீடர்களாக வாழ இன்றைய நாள் இறை வார்த்தை வழியாக நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருமே, அவருக்காக தங்கள் வாழ்வையே இழக்க துணிந்தார்கள். அவர்களுள் பலரை நாம் புனிதர்களாகக் கொண்டு, ஒவ்வொரு நாளும் அவர்களை நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்த புனிதரின் வாழ்வானது நாமும் அவர்களை போல, ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கி, அவருக்கு உகந்த மனிதர்களாக, அவரின் உண்மை சீடர்களாக நாமும் மாறிட முடியும் என்ற வாழ்வுக்கான பாடத்தை நமக்கு ஒவ்வொரு நாளும் தருகிறது.
தன்னிடம் இருக்கின்ற அனைத்தையும் ஆண்டவர் இயேசுவுக்காக இழக்கத் துணிந்த மனிதராக இன்றைய வாசகங்கள் பவுலடியாரை சுட்டிக்காட்டுகின்றன. ஆண்டவர் இயேசுவுக்காக அனைத்தையும் குப்பையென கருதுகிறேன் என அனைத்தையும் புறம் தள்ளிவிட்டு, ஆண்டவர் இயேசுவை மட்டுமே இதயத்தில் ஏற்றுக்கொண்டு, அவரின் பாதையில் அனுதினமும் நடந்த பவுல் அடியாரைப் போல, நீங்களும் நானும் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குகின்ற மனிதர்களாக, நாளும் இச்சமுகத்தில் பயணம் செய்து, உண்மைச் சீடர்களாக மாறிட, இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக