செவ்வாய், 27 செப்டம்பர், 2022

நம்பிக்கையின் சாட்சிகளாய் வாழ்வோம்! (27-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

                      இன்றைய முதல் வாசகத்தில் யோபு தன்னை குறித்தும், தான் பிறந்த நாளைக் குறித்தும்,  இழிவாக கருதுகிறார். காரணம், தன் வாழ்வில் ஏற்பட்ட துன்பங்களுக்கு காரணம், இறைவன் அல்ல, மாறாக தன்னை இந்நிலைக்கு உள்ளாக்கும் அளவிற்கு தன்னுடைய செயல்பாடுகள் இருந்ததோ என்ற எண்ணத்தின் அடிப்படையில் அவர் தன்னை குறித்து வருந்தக் கூடியவராக, தன்னை தாழ்த்திக் கொள்ளக் கூடியவராக, இறைவனின் திருமுன்னிலையில் இருப்பதை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட உயிர்த்த  ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கையற்றிருந்த மனிதர்களை வானில் இருந்து தீயைப் பொழிந்து அழித்துவிடுமாறு இயேசுவின் சீடர்கள் கூறிய போது, நம்பிக்கையால் நீங்கள் ஆழப்படவும், நம்பிக்கையின் சாட்சிகளாய் இருப்பதற்குமான அழைப்பை அவர்களுக்கு கடவுள் தரக்கூடியவராக  
 இருப்பதை நாம் இன்றைய இறைவார்த்தை வழியாக உணர்ந்து கொள்ள முடிகிறது. 

    இந்த இறை வார்த்தையின்  பின்னணியில் நமது வாழ்வை சீர்தூக்குகிற போது,  நமது வாழ்வில் ஏற்படுகின்ற துன்பங்கள் பல நேரங்களில் கடவுள் மீது நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கையிலிருந்து விலகிச் செல்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கலாம். ஆனால், துன்பங்களுக்கு மத்தியிலும்     கடவுள் நம்மை கரம் பிடித்து வழி நடத்துவார், என்ற ஆழமான நம்பிக்கையோடு, துன்பங்களுக்கு மத்தியிலும் இறைவனை இன்முகத்தோடு அதிகமாக தேடுவதற்கான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இணைந்து தொடர்ந்து இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...