செவ்வாய், 6 செப்டம்பர், 2022

தூய ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்ட வாழ்வு. (30-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 


இன்றைய நாள் இறை வார்த்தையானது தூய ஆவிக்குரிய இயல்பு கொண்ட மனிதர்களாக நாம் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை கண்டு, வியந்து போன மக்கள், எங்கிருந்து இவருக்கு இந்த ஞானம் வந்தது என வியந்தார்கள். ஆண்டவர் இயேசு கிறிஸ்து நாமும் அவரைப் போலவே இந்த சமூகத்தில் அதிகாரத்தோடு நல்ல செயல்களை முன்னெடுக்கக் கூடியவர்களாக நல்ல காரியங்களை துணிவோடு அறிவிக்கக்கூடிய மனிதர்களாக இருப்பதற்கான ஒரு அழைப்பை இன்று தருகிறார். 
           இதற்கான வல்லமையை தூய ஆவியானவர் என்றும் நம்முள் இருந்து நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்த ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து அவருக்குரிய இயல்புகளை பெற்றுக் கொண்ட மனிதர்களாக நாளும் இச்சமூகத்தில் நாம் வளர்ந்திட, இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...