செவ்வாய், 6 செப்டம்பர், 2022

திருத்தூதர் பர்த்தலமேயு! (24-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 


          இன்று தாய்த்திரு அவையானது திருத்தூதர் பர்த்தலமேயுவை நினைவு கூர்ந்து கொண்டாடிட நமக்கு அழைப்பு விடுகிறது. விலியத்தை பொறுத்த வரையில் இவரை நத்தனியேல் என்று அழைத்து இருக்கிறார்கள். இவரை இயேசு கபடற்றவர் என குறிப்பிடுகிறார்.  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் விண்ணேற்பைக் கண்டவர். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு பயணித்த போது அவரது வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு தன் வாழ்வை அவருக்கு உகந்த ஒரு வாழ்வாக மாற்றிக் கொண்டு அவரின் உண்மை சீடராக, படைப்பிற்கு எல்லாம் சென்று நற்செய்தி பறைசாற்றுகின்ற ஒரு மனிதனாக, இந்த பர்த்தலமேயு விளங்கினார் என்பதை அவரின் வாழ்வில் இருந்து நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. இந்த பர்த்தலமேயுவை நினைவு கூருகின்ற இந்த நல்ல நாளில், இறைவன் நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம், இந்த பர்த்தலமேயுவை  போல நாமும் கடவுளின் வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொண்ட மனிதர்களாக, அந்த வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற  மனிதர்களாக, இச்சமூகத்தில் வாழ இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...