வெள்ளி, 9 செப்டம்பர், 2022

இன்னல்களும் இனிதாகிட நற்செய்திப் பணியாற்றுவோம்! (9-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

     ஆண்டவர் இயேசுவை பற்றிய நற்செய்தியை அறிவிக்கக்கூடிய மனிதர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான ஒரு அழைப்பு, இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நமக்கு தரப்படுகிறது.  இப்பணியை செய்த பவுல்,  தன் வாழ்வில் எத்தகைய துன்பங்கள் வந்தாலும், துன்பங்களுக்கு மத்தியிலும் ஆண்டவர் இயேசுவை பற்றிய நற்செய்தி அறிவிக்கும் நல்லதொரு  நற்செய்தியாளராக  வாழ்ந்து, நாமும் வாழ அழைப்பு தருகிறார்.  

   அவரின் அழைப்பை இதயத்தில் ஏற்றுக்கொண்ட மனிதர்களாக, நமது வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள வேண்டுமாயின், நம்மை நாம் சரி செய்து கொண்டு,  நெறிப்படுத்திக் கொண்டு ஆண்டவரின் வார்த்தைகளை நமது வாழ்வில் ஏற்று, அதை பின்பற்றுகின்ற மனிதர்களாக நாம் மாறி, அதனை தொடர்ந்து மற்றவர்களையும் அப்பணியில்  ஈடுபடச் செய்யக்கூடிய மனிதர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான அழைப்பை இறைவன் இன்றைய நாளில் நமக்கு தருகிறார்.

      இறைவன் தருகின்ற அழைப்பை இதயத்தில் ஏற்றுக்கொண்ட மனிதர்களாக, நற்செய்தியை அறிவிக்க ஆண்டவரின் ஆசியை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் மன்றாடுவோம்.  இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...