செவ்வாய், 6 செப்டம்பர், 2022

தீர்ப்பிடாதே! (2-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 

                  இன்றைய முதல் வாசகமானது,  நாம் யாரையும் தீர்ப்பிடாமல் வாழ்வதற்கு அழைப்பு விடுக்கிறது.  நாம் மனிதர்களின் தீர்ப்புக்கு அஞ்சுவதை விட, கடவுளின் தீர்ப்புக்கு மட்டுமே அஞ்சக்கூடிய மனிதர்களாக இச்சமூகத்தில் நாளும் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற பணிகளை சிறப்போடு செய்வதற்கான அழைப்பு, இன்றைய நாளில் நமக்கு தரப்படுகிறது.

      இன்றைய நற்செய்தி வாசகத்தில் பழைய ஆடையில் யாரும் புதிய துணியை ஒட்டு போடுவதில்லை,  பழைய தோற்பையில் புதிய மதுவை ஊற்றுவதில்லை என்ற வார்த்தைகள் வழியாக இறைவன் அன்றன்றைய நாளுக்குரிய வேலைகளை அன்றன்று செய்வதற்கான ஒரு அழைப்பை  இறைவன் தருகின்றார்.  அன்றைய நாள் வேலைகளை அன்றே நாம் செய்து முடிக்கின்ற போது, அடுத்த நாளில் அடுத்த நாளுக்கான வேலைகளை குறித்து நமது கவனத்தை செலுத்த இயலும்.

    மாறாக இன்றைய நாள் வேலைகளை நாம் இன்று செய்யாமல் அதை அடுத்த நாளுக்கு கடத்திச் செல்கிற போது நமது வாழ்வில் பணிச்சுமையானது அதிகமாகி கொண்டே செல்கிறது. 

    அன்றைய நாளுக்குரிய வேலைகளை    அன்றன்றைக்கு செய்து,  நாம் கடவுளுக்கு உகந்த மனிதர்களாக, கடவுளின் தீர்ப்புக்கு மட்டுமே அஞ்சக்கூடிய நபர்களாக இச்சமூகத்தில் வாழ்வதற்கான ஒரு அழைப்பை இறைவன் இன்றைய நாளில் நமக்கு வழங்குகின்றார். 

      இந்த இறைவன் தருகின்ற அழைப்பை இதயத்தில் ஏற்றுக்கொண்ட மனிதர்களாக, நம்மை நாம் செதுக்கிக்கொண்டு நமது வாழ்வை கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வாக அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...