வியாழன், 22 செப்டம்பர், 2022

நீர் கடவுளின் மெசியா! (23-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

     

    மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனுமே வாழுகின்ற ஒவ்வொரு நாளிலும் கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை வாழ வேண்டும் என்பதை இறைவார்த்தை வலியுறுத்துகிறது. பல நேரங்களில் இந்த இறை வார்த்தை வலியுறுத்துகின்ற வாழ்வுக்கான பாடங்களை கேட்டுவிட்டு நகருகின்ற மனிதர்களாக, மாற்றத்திற்கு ஒரு காலம் வரும் என்று எண்ணிக் கொண்டிருக்கக்கூடிய நபர்களாக நாம் இருந்து கொண்டிருக்கிறோம். வருங்காலம் வளமானதாக அமைய, வரும் ஒரு காலம் என்று எண்ணக்கூடிய மனிதர்களாக நீங்களும் நானும் பல நேரங்களில் பயணம் செய்கிறோம்.

         ஒவ்வொன்றிற்கும் ஒரு காலம் உண்டு என்று இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. அதிலும் குறிப்பாக, நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்வதற்கான, அவரை அறிந்து கொண்ட நாம், அவரை அறிவிப்பதற்கான ஒரு காலமே இந்த காலம் என்பதை உணர்ந்து கொண்டவர்களாக, இயேசுவை நாம் எந்த அளவிற்கு அறிந்து வைத்திருக்கிறோம், அறிக்கையிட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை குறித்து சிந்திப்பதற்கு இன்றைய நாள் இறைவார்த்தையானது நமக்கு அழைப்பு தருகிறது. 

இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றுக் கொண்ட மனிதர்களாக, ஆண்டவரை இன்னும் ஆழமாக அறிந்து கொள்ளவும், அறிந்து கொண்ட ஆண்டவரை அறிக்கையிடவும் ஆற்றல் வேண்டி இறைவனிடத்தில் இன்றைய நாளில் தொடர்ந்து மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...