வெள்ளி, 16 செப்டம்பர், 2022

நன்மைகளை நன்றியோடு நினைவு கூர்வோம்! (16-9-22)


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

        ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது, சென்ற இடமெல்லாம் நன்மைகளை செய்து கொண்டே சென்றார். அவர் செய்த நன்மைகளின் நிமித்தமாக பலரும் அவர் மீது நம்பிக்கை கொண்டு அவரை பின்பற்றக்கூடிய சீடர்களாக மாறினார்கள். அப்படி மாறிய ஆண் பெண் சீடர்களை குறித்தே, இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம். 

          இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட மனிதர்களாக நீங்களும் நானும் இருக்கின்ற போது இறந்த இயேசு உயிர்த்தெழுந்தது போல, நீங்களும் நானும் இறுதி நாளில் உயிர்த்தெழுவோம் என்பது திண்ணம் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. 

            இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கும் வாழ்வுக்கான பாடங்களை இதயத்தில் இருத்தியவர்களாய், மண்ணில் வாழுகிற ஒவ்வொரு நாளுமே ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு செய்த எல்லாவிதமான நன்மைகளையும் நன்றியோடு நினைவுகூர்ந்து, இந்த நன்மைகளின் நிமித்தமாக அவர் மீதான நம்பிக்கையில் இன்றும் என்றும் ஆழப்படுவதற்கான ஆற்றல் வேண்டி இறைவனிடத்தில் தொடர்ந்து மன்றாடுவோம்.  இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...