செவ்வாய், 6 செப்டம்பர், 2022

தூய ஆவியாரின் இயல்பு நம்மிடம் மலரட்டும்! (31-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 

                
       ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது, சென்ற இடமெல்லாம் நன்மையை செய்து கொண்டே சென்றார். இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் கூட காய்ச்சலாய் இருந்த பேதுருவின் மாமியாருக்கு அவர் நலம் தருவதையும்,  நம்பிக்கையோடு அவரை நாடி வந்த பலருக்கு அவர் நலம் தருவதையும் நாம் வாசிக்க கேட்கின்றோம்.  இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றக்கூடிய நாம் ஒவ்வொருவருமே ஒவ்வொரு நாளும் அடுத்தவருக்கு நல்லது செய்கின்ற நபர்களாக வாழ்வதற்கான ஒரு அழைப்பு இன்று நமக்கு தரப்படுகிறது.

         இத்தகைய வாழ்வை வாழுகிற போது, நாம் ஊனியல்புக்கு ஏற்ப வாழாமல் தூய ஆவியாரின் இயல்புக்கு உரியவர்களாக நாம் இச்சமூகத்தில் வாழ முடியும். 

        பல நேரங்களில் ஊனியல்புக்கு உரிய மனிதர்களாக, தூய ஆவியானவரை தவிர்த்து விட்டு, நமது வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், தூய ஆவியின் இயல்புக்குரிய மனிதர்களாக நாளும் நாம் வளர வேண்டும் என்பதை இறைவன் இன்றைய வாசகங்கள் வழியாக நமக்கு உணர்த்துகிறார்.

           இறைவன் உணர்த்தும் இந்த வாழ்வுக்கான பாடத்தை இதயத்தில் ஏற்றுக்கொண்ட மனிதர்களாக, தூய ஆவியாரின் இயல்புக்குரிய மனிதர்களாக, நாளும் வாழ,  உலக இச்சைகளை எதிர்கொண்டு, ஆவியானவரின் துணைகொண்டு, இச்சமூகத்தில் அனுதினமும் நன்மைகளை மட்டுமே செய்து கொண்டிருப்பதற்கான ஆற்றலை இறைவனிடத்தில் இன்றைய நாளில் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...