செவ்வாய், 20 செப்டம்பர், 2022

என்னைப் பின்பற்றி வா! (21-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

நற்செய்தியாளர்களுள் ஒருவரான மத்தேயுவை குறித்து சிந்திக்க இன்றைய நாளில் திருஅவை நமக்கு அழைப்பு தருகிறது. மத்தேயு இந்த மண்ணில் வாழ்ந்த போது, மக்களிடமிருந்து வரிகளை வசூலித்து அதை உரோமையர்களுக்கு கொடுக்கக்கூடிய பணியினை செய்து வந்தார். பொதுவாக இந்த வரி வசூலிக்கும் பணியினை செய்பவர்கள் எல்லாம் தங்களிடம் இருந்து அதிகமாக வசூலித்து, அதை அடுத்த ஆட்சியாளர்களிடம் தருகிறார்கள் என்ற மனநிலை  கொண்டிருந்த காரணத்தினால் மக்கள் அவர்களை வெறுப்புக்கு உள்ளானவர்களாக கருதினார்கள். 

 எனவே இவர்களை பாவிகள் என்று முத்திரை இட்டு,  இவர்களோடு பேசவோ பழகவோ விரும்பாத மனிதர்களாக இவர்களை பாவிகள் என முத்திரை குத்திக் கொண்டே வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

 இத்தகைய சூழலுக்கு மத்தியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, அவரை தன் பணிக்கென அழைக்கிறார். அவரும் அனைத்தையும் விட்டுவிட்டு ஆண்டவர் இயேசுவின் பணியை செய்வதற்காக முன் வருகின்றார். 

இந்த மத்தேயுவை போலவே நாமும் நமது வாழ்வில் எந்நிலையில் இருந்திருந்தாலும், கடவுளின் வார்த்தைகளை வாழ்வாக்கிக் கொள்வதற்கான அழைப்பு அனுதினமும் நமக்கு தரப்படுகிறது. இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை நாம் நெறிப்படுத்திக் கொண்டிருக்கிறோமா என்ற கேள்வியை இன்று நாம் நமக்குள்ளாக எழுப்பி பார்க்க அழைக்கப்படுகின்றோம்.

     பவுல் நாம் அனைவரும் கடவுளுக்கு உகந்த மனிதர்களாக,  தூய ஆவியாரின் தூண்டுதலால் ஒருவரோடு ஒருவர் அன்பு செய்து, அன்பால் நாம் கட்டி அமைக்கப்பட்ட ஒற்றைச் சமுதாயமாக வாழ்வதற்கான அழைப்பை முதல் வாசகம் வழியாக வழங்குகிறார். 

இந்த  இறைவார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை சீர்தூக்கி பார்ப்போம்.  நமது வாழ்வு எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை  குறித்து ஆழமாக சிந்திக்கவும், இன்னும் ஆண்டவர் இயேசுவின் மீதான நம்பிக்கையில் ஆழப்படவும், அந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஆண்டவரின் வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருவதற்கான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இணைந்து செபிப்போம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...