வியாழன், 22 செப்டம்பர், 2022

நிலையானவர் இறைவன் மட்டுமே! (22-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய முதல் வாசகமானது சபை உரையாளர் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த புத்தகத்தை வாசிக்கும் பொழுது இந்த புத்தகத்தின் ஆசிரியர் கடவுள் நம்பிக்கை அற்ற ஒரு மனிதனாக இருந்திருப்பாரோ என்ற எண்ணமானது நமக்குள் எழலாம். ஆனால் கடவுளைத் தேடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு, இந்த உலகில் நடக்கின்ற எல்லா நிகழ்வுகளோடும் தன்னை ஒப்புமைப்படுத்திப் பார்த்து இறுதியில், அனைத்தும் வீண் என்று உணர்ந்து, கடவுள் மட்டுமே நிறைவை தரக்கூடியவர் என்பதை ஆழமாக இந்த புத்தகத்தின் ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.

      நிலையற்ற இந்த உலகத்தில் நிலையானது என நாம் எதையோ எண்ணிக் கொண்டு பயணிக்காமல், இறைவன் ஒருவரே நிலையானவர் என்பதை உணர்ந்து கொண்டு, ஒவ்வொரு நாளும் பயணிப்பதற்கான அருளினை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...