செவ்வாய், 6 செப்டம்பர், 2022

திருமுழுக்கு யோவானின் நீதி! (29-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 

               இன்று தாய்த்திரு அவையானது, திருமுழுக்கு யோவானின் பாடுகளை நினைவு கூர்கின்றது. பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் இணைக்கின்ற ஒரு இறைவாக்கினராக இந்த திருமுழுக்கு யோவான் இருக்கின்றார். இந்த திருமுழுக்கு யோவானின் வாழ்வு, மத்தேயு நற்செய்தி ஐந்தாம் அதிகாரத்தில் நாம் வாசிக்கின்ற, மலைப்பொழிவில் இடம் பெறுகின்ற, நீதியின் பொருட்டு துன்புறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர் என்ற இறை வார்த்தைகளுக்கு ஏற்ப அமைந்த ஒரு வாழ்வாக பார்க்கப்படுகிறது. 

         நீதியை நிலை நாட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு தவறான வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த அரசனையும் அரசன் எனப் பாராது, அவன் செய்வது தவறு என்பதை துணிவோடு எடுத்துரைக்கக்கூடிய ஒரு நபராக திருமுழுக்கு யோவான் இருந்தார். அத்தகைய செயல்பாட்டின் விளைவாக, தனது இன்னுயிரையும் இழக்க நேர்ந்தது. அவர் தனது இன்னுயிரை இழந்ததை இன்று நாம் தாய்த்திரு அவையாக நினைவு கூருகிறோம். இவரின் வாழ்வு இன்று நமக்கு தருகின்ற வாழ்வுக்கான பாடம், எந்நிலையில் இருந்தாலும் நாம் தவறை சுட்டிக்காட்டும் பண்புடைய மனிதர்களாக நாளும் இருப்பதற்கான ஒரு அழைப்பை இறைவன் இன்றைய நாளில் நமக்கு தருகிறார். நீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்ட மனிதர்களாக, நாம் இருக்கும் பொழுது, நாம் கண்டிப்பாக நிறைவு பெறுவோம் என்பதை இதயத்தில் இருத்தியவர்களாய் செயல்படுவதற்கான ஆற்றலை வேண்டி, இறைவனிடத்தில் இன்றைய நாளில் மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...