ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

நன்மை செய்வதே நமது வாழ்வின் இலக்காகும்! (19-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய முதல் வாசகமானது, நன்மை செய்து கொண்டே வாழ்வது மட்டுமே நமது வாழ்வின் இலக்கு என்பதை எடுத்துரைக்கிறது. நம்மிடம் கேட்பவருக்கு நாம் வைத்துக் கொண்டே இல்லை என்று சொல்லாமல் இருப்பதை இல்லாதவரோடு, கேட்பவரோடு பகிர்ந்து வாழ வேண்டும் என்ற வாழ்வுக்கான நெறியை இன்றைய முதல் வாசகம் வலியுறுத்துகிறது. 

                    இந்த வாழ்வுக்கான நெறியை இதயத்தில் ஏற்றுக்கொண்டு வாழ்வை அமைத்துக் கொள்ளுகிற போது நமது வாழ்வு நற்செய்தி வாசகத்தில் வாசிக்க கேட்ட இதை வார்த்தையின் அடிப்படையில், விளக்கு தண்டின் மீது வைக்கப்பட்ட விளக்காக இருந்து, பலரும் பயன்பெறக்கூடிய வகையில் நமது வாழ்வு அமையும். 

   இத்தகைய வாழ்வை நாம் நமது வாழ்வாக மாற்றிக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...