செவ்வாய், 6 செப்டம்பர், 2022

மதிப்பு மிகுந்தவர்களாக பணியாற்றிடுவோம்! (20-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 
     
   

இன்றைய நாளின் வாசகங்கள் வழியாக இறைவன் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான வாழ்வுக்கான பாடத்தை கற்பிக்கின்றார். மற்ற மனிதர்களுக்கு முன்னிலையில் மதிப்பை தேடக்கூடிய மனிதர்களுக்கு, கடவுள், முதல்வராக இருக்க விரும்புபவர் தொண்டனாக இருக்கட்டும் என்று தொண்டாற்றுவதற்கான ஒரு அழைப்பை தருகின்றார்.

              இன்றைய முதல் வாசகத்தில் கூட நான் இஸ்ரயேல் மக்களோடு என்றும் வாழ்வேன் என்று கூறிய இறைவன், நம் மத்தியில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரின் வார்த்தைகளின் வழியாக நமது வாழ்வை அவர் ஒவ்வொரு நாளும் நெறிப்படுத்துகிறார். மதிப்பையும், பணத்தையும், பதவியும், தேடி ஓடக்கூடிய மனிதர்களாகிய நாம், இதில் நிறைவு காண்பதை விட, ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்வை வாழ, தொண்டராக இருந்து, அனைவருக்கும் பணி செய்து, அந்த பணியின் நிமித்தமாக மகிழ்ச்சியை கண்டு கொள்வதற்கான ஒரு அழைப்பை இறைவன் தருகிறார்.

      மதிப்பை எங்கோ தேடுவதை விட, நமது செயல்களால் கடவுளின் மதிப்புக்கு உரிய மனிதர்களாக நாம் மாறிட, இறைவன் இன்றைய நாளில் நமக்கு அழைப்பு தருகிறார். இறைவனின் அழைப்புக்கு செவிகொடுத்தவர்களாய், நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...