சனி, 17 செப்டம்பர், 2022

முன் மதியோடு ....... நம்பிக்கையோடு...... (18-9-22)


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

        மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற வாழ்வுக்கான நெறிகளை இன்றைய வாசகங்கள் முன்மொழிகின்றன. மண்ணில் வாழுகிற போது ஒவ்வொரு மனிதனும் ஒருவர் மற்றவர் நலனில் அக்கறை கொண்டவராய், இணைந்து இன்புற்று வாழ வேண்டும். ஆனால், தொடக்க காலத்தில் மனம் போன போக்கில் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற மனநிலையோடு, தான் விரும்பிய வகையில் தன் வாழ்வை அமைத்துக் கொள்வதற்காக அடுத்தவர் வாழ்வை துச்சமென கருதுகிற ஒரு போக்கானது மனிதர்களிடத்தில் காணப்பட்டது. இத்தகைய போக்கு தவறு என்பதை இறைவாக்கினர்களும் ஆண்டவர் இயேசுவினுடைய சீடர்களும் துணிவோடு அறிவித்தார்கள். அந்த அடிப்படையில் தான் இன்றைய முதல் வாசகம், மனிதர்களிடத்தில் இருந்த தவறான எண்ணங்களையும், தவறான செயல்களையும் சுட்டிக் காட்டுகிறது. 

                     இன்றைய இரண்டாம் வாசகம் ஒவ்வொரு மனிதனும் இந்த மண்ணில் எப்படிப்பட்ட மனிதனாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறுகிறது.

 நற்செய்தி வாசகத்திலும் இறைவன் நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும்,  கடவுளுக்கு உகந்த மனிதர்களாகவும், ஒருவர் மற்றவர் நலனில் அக்கறை காட்டக் கூடியவர்களாகவும், எப்போதும் முன்மதியோடு செயல்படுகின்ற மனிதர்களாகவும் இருக்க வேண்டும் என்ற வாழ்வுக்கான பாடத்தை நமக்கு தருகின்றார். 

              இந்த வாழ்வுக்கான பாடங்களை எல்லாம் இதயத்தில் ஏற்றுக் கொண்ட மனிதர்களாக, நீங்களும் நானும், நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.  இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...