ஞாயிறு, 12 ஜூலை, 2020

"இயேசுவின் சீடர்களாக மாறுவோம், சீடர்களோடு துணை நிற்போம்..." ஜூலை - 13


"இயேசுவின் சீடர்களாக மாறுவோம் சீடர்களோடு துணை நிற்போம்..."
இன்றைய நற்செய்தி வாசகத்தை எவ்வாறு புரிந்து கொள்வது?

இந்தக் கேள்வி இன்றைய நற்செய்தி வாசகத்தைக் கேட்கக்கூடிய ஒவ்வொருவருக்கும், படிக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் இயல்பாக எழக்கூடியது... காரணம் " நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம் அமைதியை அல்ல வாளையே கொணர வந்தேன் "என்கிறார் இயேசு...

 சமூகத்தில் அநீதி நிலவும் போது அதை கண்டு அமைதியாக இருப்பது அல்ல இறைவனது விருப்பம் அதை கண்டு அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பது அவரின் விருப்பம் இதையே இயேசு தாம் வாழ்ந்த காலத்தில் இவ்வுலகில் செய்தார்....

அதன் விளைவாக உற்றார், உறவினர், நண்பர்கள், சீடர்கள் என அனைவரையும் இழந்து மனிதநேயமற்ற முறையில் குற்றம் ஏதும் செய்யாதிருந்தும் கொலை செய்யப்பட்டார் என்பதை நாம் அறிவோம்.

இந்த இயேசு ஏன் தன்னை விட தன் தாயையும், தந்தையையும், மனைவியையோ அன்பு செய்யக்கூடாது என கூறுகிறார் என சிந்திக்கும்போது இதனை இவ்வாறு பொருள் கொள்ளலாம் ..

இன்று அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க தடையாக இருப்பது நம் குடும்ப உறவுகளே... குடும்பத்தின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாகவே நம்மில் பலர் கண்முன் நடக்கும் அநீதிகளை கண்டும் காணாமல் இருந்து கொண்டிருக்கிறோம். இதையே இறைவன் இன்று சாடுகிறார் ....


இந்த இயேசு இன்ற நமக்கு தரக்கூடிய செய்தி... "இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார்..." என்கிறார் இயேசு ...


இன்று யார் இயேசுவின் சீடர்கள் ?சமூகத்தில் நடக்கக்கூடிய அநீதிகளை கண்டு அதற்கு எதிராக குரல் கொடுக்கக்கூடிய ஒவ்வொரு நபரும், தேவையில் இருப்போருக்கு உதவக்கூடிய ஒவ்வொரு நபரும்  இயேசுவின் சீடர்கள் தான்.  அத்தகையோருக்கு நாம் செய்யக்கூடிய சிறு உதவி கூட இயேசுவுக்கே செய்ததாகும். சமூகத்தில் நடக்கும் அநீதிகளை எதிர்த்துப் போராட நாம் முன் வராவிட்டாலும் போராடக்கூடிய இயேசுவின் சீடர்களுக்கு பக்கபலமாக துணை நிற்கக் கூடியவர்களாக நாம் உருவாக வேண்டும் ...
அன்று இயேசு சமூகத்திற்காக, சமூக அவலங்களை எதிர்த்து  போராடியபோது அவருடன் யாருமில்லை,  இருந்த சிலரும்  அவரை விட்டு ஓடினார்கள்...

இன்று சமூக நீதிக்காக போராடக் கூடியவர்களுக்கு,   தேவையில் இருப்போருக்கு உதவக்கூடிய ஒவ்வொரு நபருக்கும்  பக்கபலமாக துணை நின்று 
இயேசுவின் சீடர்களாக மாறுவோம், சீடர்களோடு துணை நிற்போம்..."

இதற்கு இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்று நமது வாழ்வை சீர்படுத்திக் கொள்ள முயல்வோம்...

இயேசுவின் சீடர்களாக மாறுவோம் சீடர்களோடு துணை நிற்போம்..."

1 கருத்து:

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...