வெள்ளி, 17 ஜூலை, 2020

இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குவோம்"


"இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குவோம்" 

பிரியமானவர்களே உங்கள் அனைவரோடும் இன்றைய நாள் நற்செய்தி வாசகங்கள் குறித்த என் சிந்தனைகளை பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் .

"இவர் நான் தேர்ந்து கொண்டவர்"  என இயேசுவை கடவுள் சுட்டிக்காட்டுகிறார். இன்று நாம் வாழும் சமூகத்தில் "இவர் நான் தேர்ந்து கொண்டவர்"  என யாரேனும் ஒருவர் நம்மை சுட்டிக் காட்டுகிறார்களா? என சிந்திக்க உங்களை அன்போடு அழைக்கிறேன்...

இயேசுவை கடவுள் சுட்டிக்காட்டுவது போல நம்மையும் பிறர் சுட்டிக்காட்டக் கூடிய அளவிற்கு இயேசுவைப் போல நமது செயல்கள் இருந்தனவா? என்ற கேள்வியை நமக்குள் எழுப்பி பார்ப்போம்.

 இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவைப் பற்றி இவ்வாறு கூறுகிறது. 

"இவர் சண்டை சச்சரவு செய்ய மாட்டார், கூக்குரலிட மாட்டார், தன் குரலை தெருவில் எழுப்ப மாட்டார், நீதியை வெற்றிபெறச் செய்யும் வரை நெரிந்த நாணலை முறியார், புகையும் திரியை அணையார். எல்லா மக்களினத்தாரையும் இவர் பெயரில் நம்பிக்கை கொள்வர்" ...

அன்புக்குரியவர்களே!
  இன்று நாம் வாழும் உலகில் நீதி வேண்டுமென வீதிகளில் குரல் எழுப்புகின்ற கூட்டங்கள் ஏராளமாக இருந்துகொண்டுதான் இருக்கின்றன...

பெரும்பாலான இந்தக் கூட்டங்கள் தங்களுக்கான நீதியை கேட்கின்றன அல்லது அடுத்தவருக்கு நீதியை வழங்க வேண்டுமென முழக்கங்கள் இடுகின்றன. இதில் துளியளவும் தவறில்லை. ஆனால் நீதியை நிலைநாட்ட வேண்டும் என முழக்கமிடுவதோ அல்லது அடுத்தவருக்கு நீதியை தரவேண்டும் என விரும்புவதோ வெறும் வாய் வார்த்தைகளாக இல்லாமல் அவை செயல்வடிவம் பெற வேண்டும் .

 இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது நீதியை நிலைநாட்ட வேண்டும் என வீதிகளில் முழக்கமிட்டுக் கொண்டே இருந்தவர் அல்ல, மாறாக எந்த நீதி அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என எண்ணினாரோ அந்த நீதியை தனது செயலில் அவர்களுக்குத் தந்தவர்  இந்த இயேசு கிறிஸ்து...

தொழுநோயாளிகள் என சமூகத்தால் புறம்தள்ளி ஒதுக்கப்பட்ட மக்களை தொட்டவர் இந்த இயேசு.   தொழு நோயாளர்களை ஒதுக்கி வைக்காதீர்கள் என வாய் வார்த்தைகளால் மட்டும்    அறிவித்தவர் அல்ல, மாறாக  தான் அறிவிக்க வேண்டும் என  எண்ணியதை செயல்வடிவமாக்கி காட்டியவர் இந்த இயேசு...

 இன்று நாம் வாழும் உலகில் ல்லதை, நீதியை பற்றி பேசும் நபர்கள் ஏராளம் ஆனால் பேசக்கூடிய வார்த்தைகளை செயல் வடிவமாக மாற்றுபவர்கள் மிகவும் குறைவு ...

இயேசு சொல்வதை விட, அறிவிப்பதை விட செயல்வடிவமாக்கிக் காட்டியவர். அவரை பின்தொடர கூடிய நாம் வெறும் வாய் வார்த்தைகளால் சமூகத்தில் வலம் வருவதை விட அவரின் வார்த்தைகளை செயல் வடிவமாக்கக் கூடிய உண்மையான சீடர்களாக இச்சமூகத்தில் உருவாக வேண்டும்... அவ்வாறு நாம் உருவாகும்போது கண்டிப்பாக கடவுள் மட்டுமல்ல கண்ணில் காணக்கூடிய ஒவ்வொரு நபர்களும் சொல்வார்கள் இவர்"இவர் நான் தேர்ந்து கொண்டவர்"   என்று ...  

இயேசுவின் உண்மையான சீடராக மாறிட... இயேசுவின் வார்த்தைகளை அறிவிப்பதோடு மட்டுமல்லாமல் அதனை செயல் வடிவமாக்க கூடியவர்களாக இவ்வுலகில் வலம் வருவோம்.

இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குவோம்" 


1 கருத்து:

  1. செயல்கள் இல்லாத நம்பிக்கை, செத்த நம்பிக்கை. நமது நம்பிக்கைக்கு செயல்வடிவம் கொடுத்து இயேசுவைப் போல் வாழ்வோம்!! இயேசுவின் சீடர்களாய் வாழ்வோம்!! உயிர்உள்ளவரின் நற்செய்திக்கு உண்மையான சாட்சிகளாகவோம்.

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...