சனி, 3 ஜூன், 2023

ரபி நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்! (1-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

        இன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்ட மனிதனாக பார்வையற்ற பர்த்தலோமேயு என்ற மனிதன் நம்பிக்கையோடு கடவுளை கூவி அழைத்து, அவரிடம் இருந்து நலன்களை பெற்றுக் கொள்வதை நாம் நற்செய்தி வாசகமாக வாசிக்கக் கேட்டோம். 

        இந்த இறை வார்த்தை பகுதியில் நமது வாழ்வை சீர்தூக்கி பார்க்கின்றபோது, நம்பிக்கை நிறைந்த மனிதர்களாக கடவுளை நோக்கி அழைக்கின்ற போது கடவுள் நமது மன்றாட்டுக்களுக்கு நின்று பதில் தருவார் என்பதை உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம். பர்த்தலோமேயுவிடம் காணப்பட்ட அதே நம்பிக்கையை நமது நம்பிக்கையாக மாற்றிக்கொண்டு நாளும் இயேசுவின் பாதையில் பயணம் செய்ய ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...